பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

போலியோ

229

பொறியியல் துறைக்கான அடிப்படை அறிவை நம் முன்னோர்கள் நெடுங்காலமாகப் பெற்றிருந்தனர் என்பதற்கு இன்றும் காட்சி தரும் கல்லணையும் வானோங்கி நிற்கும் கோபுரங்களும் ஏற்ற சான்றுகளாக உள்ளன. அவ்வாறே எகிப்தில் உள்ள பிரமிடுகளும் முற்கால பொறியியல் நுட்பத் திறனுக்குச் சான்று பகர்வனாக உள்ளன.

பிற்காலத்தில் இராணுவத்துக்கு வேண்டிய போர்த்தளவாடங்களைச் செய்வோர் பொறியாளர் என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். இன்று மக்களுக்குப் பயன்படும் கட்டுமானத் தொழில் வல்லுநர் எந்திர அமைப்பாளர், செய்தி மற்றும் போக்குவரத்து துறை வல்லுநர் ஆகியோர் பொறியியலாளர் என்று அழைக்கப்படுகின்றனர். அத்தொழில் சார்ந்த துறைகள் பொறியியல் துறைகளாகக் கருதப்படுகின்றன.


போலியோ : இதைத் தமிழில் 'இளம்பிள்ளை வாதம்’ என்று கூறுவர். இளம்பிள்ளைகளுக்கு வாத நோயாக வந்து கால்களை முடமாக்கி விடுவதால் இந்நோய் இப்பெயர் பெற்றுள்ளது. மனிதர்களை மிகவும் அச்சுறுத்தும் ஓரிரு நோய்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அச்சுறுத்தலுக்கு அடிப்படைக் காரணம் இந் நோய் உடலை ஊனப்படுத்துவதேயாகும்.

பெரும்பாலும் குழந்தைகள் அல்லது இளம் சிறுவர்களைத் தாக்கும் இந்நோய் முதலில் முதுகுத் தண்டு, நரம்பு மண்டலம். உடல் உறுப்புகளின் சில தசைகள் இவற்றைத் தாக்கி முடமாக்குவது இந்நோயின் இயல்பாகும். மிக அரிதாக பெரியவர்களைத் தாக்கி ஊனப்படுத்துவதும் உண்டு. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லோருமே ஊனமாகிவிடுவதில்லை. ஒரு சிலரே கடுமையான ஊனத்துக்கு ஆளாகின்றனர்.

பொதுவாக, போலியோ நோய் தாக்கிய இரண்டொரு நாட்களில் தலைவலி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு, வயிற்றோட்டம் போன்ற உடற்கோளாறுகள் ஏற்படும். உடனடியாக வாத நோய் தாக்குவதில்லை. இத்தகைய நோய் அறிகுறிகள் கொண்ட நூறு பேரில் ஓரிருவர் மட்டுமே கடுமையான போலியோ நோய்க்கு ஆளானவராக இருப்பார். போலியோ நோய் எனக் கண்டறியப்பட்டவர்களில் பாதிப்பேர் முறையான மருத்துவத்தின் மூலம் உடனடியாகக் குணமாகிவிடுவர். முப்பது சதவீதத்தினர் சிறிய பாதிப்புகளோடு குணமடைவர். பதினான்கு சதவீத போலியோ நோயாளிகள் வாத நோய்க்கு ஆளாகியிருப்பர். ஆறு சதவீதத்தினர் மரணமடைய நேரிடும். இருபது வயதுக்குள்ளாக உள்ள 156 பேரில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே போலியோ நோய் பாதிப்புக்கு ஆளா கின்றனர்.

போலியோ நோய் மூன்று வகையான நச்சு நுண்ணுயிர்களால் (Viruses) உண்டாகிறது. இப்போலியோ கிருமிகளை உருப்பெருக்காடி கொண்டு மட்டுமே காண முடியும். வைரஸ் நச்சு நுண்ணுயிர்கள் செல்களுடனே வாழக் கூடியதாக உள்ளது.

போலியோ நோயுண்டாக்கும் வைரஸ்கள் உடலுள் புகுந்தவுடன் நரம்புகள் வழியே இரத்தத்தில் பயணம் செய்து முதுகுத் தண்டையும் மூளைப்பகுதியையும் அடைகின்றன. அங்குள்ள செல்களில் இவை வளர்ந்து முதுகுத் தண்டைப் பாதிக்கின்றன.

இந்த நரம்பு செல்கள் வீங்கிப் பருமனாகின்றன. இதனால் நோய்க்காளாக நேர்கின்றது. தசைகள் கட்டுப்பாட்டை இழப்பதால் இயங்க முடிவதில்லை. இதனால் அவர்கள் வாத நோய் பாதிப்புடையவர்களாகின்றார்கள். நரம்புகள் மீண்டும் பழைய நன்னிலையை அடைந்தால் தசைகள் திரும்பவும் இயங்கத் தொடங்கும். ஆனால், நரம்பு செல்கள் வைரஸ் கிருமிகளால் கொல்லப்பட்டிருந்தால், நரம்புகளுடன் இணைக்கப்பட்டிருந்த தசைகள் என்றென்றைக்குமாக செயல்பட முடியாமல் நிரந்தர வாதநோய் பாதிப்புக்கு ஆளாகி விடும்.

போலியோ நோய் பலவகைப்படும். உடலின் எந்தப் பகுதி நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதோ அப்பகுதியைப் பொறுத்து நோயின் வகை அறியப்படும். முதுகுத் தண்டு வட போலியோ முதுகுத்தண்டு வட நரம்புகளைப் பாதிக்கும். பல்பார் போலியோ மூளைப் பகுதியைப் பாதிக்கும். இதனால் மூச்சு இயக்கத் தசைகள் இயங்காமல் போக நேரிடும். இத்தகைய பாதிப்புக்கு ஆளானவரின் சுவாசத் தசைகளை இரும்பு நுரையீரல் (Iron lung) எனப்படும் செயற்கை நுரையீரல் கருவி கொண்டு நோயாளியின் வாழ்வைக் காக்க முடியும்.

போலியோ நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடனேயே மருத்துவரை அணுகவேண்