பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூளை

251

சவ்வு உறைகளுக்கும் மூளைக்குமிடையே ஒருவகை திரவம் உள்ளது.

மூளைப் பகுதிகளின் பணிகள்

மூளையை மூன்று முக்கியப் பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை, பெரு மூளை, சிறு மூளை, முகுளம் என்பனவாகும்.

பெருமூளை இரு மூளைகளையும் விட அளவிலும் செயல்பாட்டிலும் பெரிதாகவும் முதன்மையுடையதாகவும் இருப்பதால் "பெருமூளை" எனப் பெயர் பெற்றது. மனிதனின் சிந்தனையாற்றலுக்கும் கற்பனைத் திறனுக்கும் நினைவாற்றலுக்கும் பெருமூளையே பெருங்காரனமாகும். இதன் நடுவில் பிளவு உள்ளதுடன் நெருக்கமான மடிப்புகளையுமுடையதாகும். மனிதனின் அறிவாற்றலுக்கு இம்மடிப்புகளே காரணம். பிற உயிரினங்களின் மூளைகளில் இத்தகைய மடிப்புகள் இல்லை.

பெருமூளையில் உள்ள மடிப்புகளின் மூலம் இது பல பகுதிகளாக அமைந்து உடலை இயக்கி வருகிறது. ஒவ்வொரு பகுதியும் உடலின் ஒவ்வொரு உறுப்பை இயக்கி வருகிறது. உடலின் வலப்பகுதியில் அமைந்துள்ள உறுப்புக்களை பெருமூளையின் இடப்பகுதியும் உடலின் இடப்பக்கத்தில் உள்ள உறுப்புகளை பெருமூளையின் வலப்பகுதியும் கட்டுப்படுத்தி இயக்குகின்றன.

பெருமூளையின் வெளிப்பகுதி புறணி என்று அழைக்கப்படும். இதன் நிறம் சாம்பல் நிறமாகும். இதில் 90 இலட்சம் உயிரணுக்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். பெரு மூளையின் வெளிப்புறம் சாம்பல் நிற அணுக்களால் ஆகியதால் சாம்பல் நிறத்தைப் பெற்றுள்ளது. இவ்வணுக்களே மனிதனின் செயல்களைக் கட்டுப்படுத்துவதுடன் அவன் சிந்தனை ஆற்றலையும் வளர்க்கிறது. ஒவ்வொரு அணுவிலும் நரம்பிழைகள் பல பிணைந்துள்ளன. இந்த நரம்பிழைகளே மூளைக்குச் செய்தி கொண்டு வருவதுடன் உத்திரவுகளையும் பெற்று உறுப்புகளுக்கு அறிவிக்கின்றன.

மின்னணு உருப்பெருக்காடி காட்டும் முளைத்தண்டு நரம்பணு

பெருமூளைக்கு அடுத்தபடியாக முக்கியத்துவமுடையது சிறு மூளையாகும். இது பின் மூளை என்றும் அழைக்கப்படுவதுண்டு. உடல் தசைகளைக் கட்டுப்படுத்தி இயங்கச் செய்யும் ஆற்றலையுடையது. சிறுமூளையிலுள்ள நரம்பு நார்கள் தண்டுவடத்தின் மூலம் உடலின் அனைத்துப் பாகங்களையும் இணைக்கின்றன. மனிதர்கள் நடக்கும் போதோ குனிந்து உட்காரும்போதோ சாய்ந்து விடாமல் சம நிலையில் இருக்கச் செய்வது சிறு மூளையேயாகும். சிறுமூளை ஏதாவது ஒருசில பாதிப்புக்கு ஆளானாலும் மனித உடல் சமநிலை இழந்து, நிமிர்ந்து இயங்காது. கண்ணின் பார்வை நரம்புகளும் காதின்