பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அணு உலை

பகுக்க முடியாத மிக நுண்ணிய கூறு இறுதியாக மிஞ்சும். அத்தனிமத்தின் பண்புகள் அனைத்தையும் கொண்ட அந்நுண்ணிய கூறே அணுவாகும் என்பதையும் முன்பே கண்டோம். இந்த அணுவின் நடுப்பகுதியில் அமைந்த ஆற்றல்மிகு நுண் பகுதியே ‘அணுக் கரு’ என்பதையும் அறிவோம்.

அணு ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலப் பெரும் முயற்சிக்குப் பின்னர் அணுவின் அமைப்பையும் அணுக்கருவின் இயல்பையும் அதன் செயற்பாடுகளையும் கண்டறிந்தனர்.

அணுக்கருவானது நேர் மின்னோட்டமுடைய புரோட்டான்கள் மின்னூட்டம் இல்லாத நியூட்ரான்கள் எனும் அடிப்படைத் துகள்களால் ஆனதாகும். இவ்வணுக்கரு எலெக்ட்ரான் எனப்படும். எதிர் மின்னுரட்டமுடைய அடிப்படைத் துகள்கள் வலம்

பம்பாய்க்கருகில் டிராம்பேயில் உள்ள அணு ஆய்வு மையம்

வந்தபடி உள்ளன. ஒரு புரோட்டான் மின்னூட்டமும் ஒரு எலெக்ட்ரான் மின்னூட்டமும் அளவில் ஒத்தவைகளாகும். அணுக்கருவின் உட்பகுதி முழுமையும் நிறைந்திருப்பவை அணுக்கரு துகள்களேயாகும். அணுக்கரு ஏறக்குறைய கோலி வடிவையுடையதாகும். சிறிய அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் எண்ணிக்கைச் சமமாக இருக்கும்.


பெரிய அணுக்கருவில் இஃது வேறுபட்டும் இருக்கும்.

அணுவின் இயற்பியல் பண்பு அணுக்கருவைப் பொருத்து அமையும். தனிமத்தின் வேதியியல் பண்பு எலெக்ட்ரான்களைப் பொருத்ததாக அமையும்,

புரோட்டானும் நியூட்ரானும் ஏறத்தாழ ஒரே நிறையுடையனவாகும். இதோடு ஒப்பிடும்போது எலெக்ட்ரானை நிறையே இல்லாத துகள் என்று கூறிவிடலாம். எனவே, ஓர் அணுவின் நிறை என்பது அணுக்கருவின் நிறையே யாகும். அணுக்கருவின் நிறையை நிறை மாலை (Mass Spectrograph) என்னும் கருவி கொண்டு அளவிடுவர்.

அணு உலை : அணு சக்தியை மின் சக்தியாக மாற்ற அணு உலைகள் பயன்படுகின்றன. அணுக்கருவைப் பிளப்பதன் மூலம் வேண்டிய அளவு சக்தியைப் பெறமுடியும். அதேபோன்று ஒன்றிற்கு மேற்பட்ட அணுக் கருக்களைப் பிணைப்பதன் வாயிலாகவும் பெரும் சக்தியைப் பெற முடியும். இவ்வகையில் வெளிப்படும் அணு சக்தியை மின் சக்தியாக ஆக்குவதற்குரிய அமைப்புகளோடு அணு உலைகள் அமைந்துள்ளன.

அணு உலைகளில் அணுவைப் பிளப்பதால் பெருமளவில் வெப்பம் வெளிப்படும். இவ்வெப்பத்தைக் கொண்டு நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நீராவியைக் கொண்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

அணு உலைகளில் யுரேனியத்தை எரி பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். யுரேனியம் வெண்மை நிறத் தனிமம் ஆகும். நிலக் கரியைவிடப் பன்மடங்கு எரியாற்றல் உள்ளது யுரேனியம். ஒரு டன் யுரேனியம் பதினாயிரம் டன் நிலக்கரிக்குச் சமமாகும்.

இந்தியாவில் அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் முயற்சி பெரும் பயன் அளித்து வருகிறது. இதற்கான பல அணு உலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. மேலும் அமைக்கப்பட்டும் வருகின்றன. பம்பாயில் உள்ள அப்சரா, சைரஸ், பூர்ணிமா, துருவா என்ற பெயர்களில் ஆராய்ச்சி அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் கல்பாக்கம் என்ற