பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விமானப் படை

289

விமானிகளையும் ஏற முனையும் விமானிகளையும் முன்னதாக செய்தி தந்து, எப்போது இறங்க வேண்டும். எப்போது ஏற வேண்டும், என்பதை அறிவுறுத்தும் அமைப்பு ஒன்று உண்டு. இது 'போக்குவரத்துக் கட்டுப்பாட்டு’ அமைப்பாகும் (Control Tower). இதனை விமான தளத்தின் உயிர் மூச்சு என்று கூடக் கூறலாம். இங்குள்ள அலுவலர்கள் விமானிகளோடு வானொலி மூலம் தொடர்புகொண்டு அறிவுறுத்துவார்கள். எந்த ஓடு பாதையில் இறங்குவது அல்லது ஓடி மேலே ஏறுவது என்பதையும் ஓடுபாதை பிற விமானங்களால் பயன்படுத்தப்படும்போது எவ்வளவு நேரம் வானில் வட்டமிட வேண்டும் என்பதையும் இக்கட்டுப்பாட்டு நிலைய அதிகாரிகள் விமானிகளுக்கு அறிவுறுத்துவார்கள். அதற்கேற்ப விமானிகளுக்கு விமானத்தை இறக்கவோ ஏற்றவோ செய்வார்கள்.

மேலும், பொது மக்கள் தொடர்பான பல அலுவலகங்கள் விமான தளங்களில் அமைந்திருக்கும். அவற்றுள் முக்கியமானவை விமானங்களின் வருகை, புறப்பாடு பற்றிய தகவல்களைத் தரும் தகவல் மையம், விமான தரை நிர்வாக அலுவலகம், கங்கத் துறை அலுவலகம். சிற்றுண்டிச் சாலை, அஞ்சல், தந்தி, தொலைபேசி அலுவலகங்கள், வங்கி மற்றும் பல்வேறு பொருட்களை விற்கும் கடைகள் உள்ளன. வெளிநாடு செல்லும் பயணிகளுக்கென சுங்கத் தீர்வையற்ற பொருட்கள் விற்கும் தனிப் பிரிவும் விமான தளத்தின் புறப்பாட்டுப் பகுதியில் அமைந்திருக்கும்.

விமானம் மூலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வகையில் சுற்றுலா தகவல் மையம் முதலுதவி போன்ற மருத்துவ வசதி தரும் நிலையங்களும், எதிர்பாராது ஏற்படும் தீ விபத்துக்களை சமாளிக்க தீயணைப்புப் பிரிவும் விமான தளத்தில் அமைந்துள்ளன.

சில முக்கிய நகரங்களில் வெளியே செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கென தனியாக பன்னாட்டு விமான தளமும் உள் நாட்டுப் பயணிகளுக்கென உள்நாட்டு விமான தளமும் தனித் தனியே தனியிடங்களில் அமைந்திருக்கும். இவற்றைத் தவிர ராணுவ விமானப் படைக்கென தனி விமான தளங்கள் தக்கப் பாதுகாப்புக்களோடு அமைந்திருக்கும். இப்போர்ப்படை தளங்களின் அமைப்பு முதலான தகவல்கள் விமானப் படையினரைத் தவிர வேறு யாருக்கும் தெரியா. இவை இரகசிய பாதுகாப்பு இடங்களாகும். இங்கு வேறு யாரும் செல்ல முடியாது.


விமானப் படை : இராணுவத்தில் தரைப் படை, கப்பற்படை இருப்பது போன்று விமானப் படையும் உண்டு. எனவே, இராணுவத்தை ‘முப்படை’ என்று அழைக்கிறோம். கடற்கரை இல்லாத நாடுகளில் கப்பற்படை இருப்பதில்லை. ஆனால், விமானப்படை இல்லாத நாடோ, ராணுவமோ இல்லை எனலாம்.

போர்க்காலத்தில் தரைப்படையும் கப்பல் படையும் எவ்வளவு முக்கியத்துவமுடையதோ அதைவிட அதிக முக்கியத்துவமுடையதாக விமானப்படை கருதப்படுகிறது. கப்பல் படை கடலிலும் கடற்கரையோரங்களிலும் மட்டுமே சென்று போரிட முடியும், ஆனால், விமானப் படையோ மலைப்பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளின் மீதும் பறந்து சென்று தாக்கிப் போரிட முடியும். இதன் மூலம் விமானப்படை இராணுவத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவ முடைய பகுதியாக விளங்குகிறது. விமானப் படையைக் கொண்டு எதிரிகளின் தரைப் படையையும் கப்பற்படையும் தாக்கி அழிக்க முடியும். விரைந்து சென்று தாக்கி விரைந்து திரும்ப விமானத்தால் மட்டுமே இயலும்.

போர்க்காரணங்களுக்காக விமானப்படையில் மூன்றுவகை விமானப்பிரிவுகள் உள்ளன. அவை சாதாரண போர்விமானம், குண்டு வீச்சு விமானம், உளவுபார்க்கும் விமானம் ஆகியனவாகும். இவ்விமானங்கள் தங்கள் செயல் பாட்டிற்கேற்ப வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டிருக்கும். இவற்றில் விமானியோடு, எதிரிகளோடு போரிடுவோரும் இருப்பர். விமானப் படையில் பல பிரிவுகள் உண்டு. விமானப் படை விமானங்கள் விரைந்து சென்று மீள்வனவாகும். ஆள் இன்றி குண்டு வீசும் தானியங்கி விமானங்களும் விமானப்படையில் உண்டு.

இந்திய விமானப்படை ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1988இல் உருவாக்கப்பட்டது. நாடு விடுதலை பெற்ற பின்னர் பிற துறைகளைப் போன்றே விமானப்படையும் திருத்தியமைத்து விரிவாக்கப்பட்டது.

இந்திய விமானப்படை விமான லகைகளில் பல தற்போது இந்தியாவிலேயே உருவாக்கப்

19