பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெறிமயக்க மருந்து

301

பட்டிருக்கும் குடுவை போன்றே சற்றுப் பெரிதானவேறொரு குடுவை வெளிப்புறத்தில் இருக்கும்,

வெற்றிடக் குடுவை

இரண்டும் இணைந்திருக்கும் போது உண்டாகும் இடை வெளியிலுள்ள காற்று வெளியேற்றப்பட்டு வெற்றிடம் உண்டாக்கப்படுகிறது. பின் இதன் கீழ் மேல் விளிம்புகளை இளக்கி ஒன்றாக இணைப்பர்.இவ்வெற்றிடத்தால் வெப்பச் சலனம் ஏற்பட இயலாமல் போகிறது. காற்று இல்லாத காலியிடமான வெற்றிடத்தின் இயல்பு அது.

கண்ணாடிக் குடுவையின் வெளிப்புறம் பளப்பளப்பான பூச்சுடன் இருக்கும். இஃது வெற்றிடக் குடுவை வெப்பக்கதிர் வீச்சைத் தடுக்கிறது. இணைக்கப்பட்ட கண்ணாடிக் குடுவையின் கீழாக அமைக்கப்படும் தக்கைத் தாங்கியும் கண்ணாடியும் வெப்பக் கடத்தலைத் தடுக்கிறது. இதனால் குடுவையுள் இறுக மூடி வைக்கப்படும் பொருள் தன் வெப்பத்தை இழக்காமல் இருக்க முடிகிறது. கண்ணாடிக் குடுவையின் அடிப்பகுதியில் சிறிய வளைவு ஒன்று இருக்கும். இஃது குடுவைக்கு ஏற்படும் அதிர்ச்சியைத் தாங்கும் தன்மையுடையதாகும்.

வெற்றிடக் குடுவையில் சூடான பொருட்களோ அல்லது ஐஸ் போன்ற குளுமையான பொருட்களோ வைக்கப்பட்டால் அவை வைத்த நிலையிலேயே நீண்ட நேரம் இருக்கும்.

வெற்றிடக் குடுவையை முதன்முதலில் கண்டறிந்தவர் சர் ஜேம்ஸ் டியூவர் என்பவராவார். இவர் இதை 1885ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.


வெறிமயக்க மருந்து : சிலவகை நோய்களுக்கு மயக்கமூட்டும் மருந்துகளைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வதுண்டு. அவை மயக்கம், போதை தரும் மருந்துகளாகும். அவை அபினியிலிருந்து செய்யப்படுவதுண்டு. மார்பீன், ஹெரோய்ன், கொக்கேன், எல்.எஸ்.டி. மாத்திரை போன்றவை இவ்வகையான மருந்துகளாகும். இவற்றை மருந்தாக மட்டுமே பயன்படுத்தாது அவைதரும் போதை மயக்கத்திற்காகவே, அவைகளை அடிக்கடி உண்ணும் பழக்கத்தைச் சிலர் மேற்கொள்வதும் உண்டு. இவை ஒருவித வெறித்தனமான மயக்கத்தைத் தருவதால் இவை 'வெறி மயக்க மருந்துகள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இம்மருந்துகளைத் தொடர்ந்து உண்ணும் பழக்கத்தை மேற்கொண்டால் இவற்றிற்கு அடிமையாகிப் போக நேரிடும். இவ்வெறி மயக்க மருந்துகளை உட்கொள்ளாதிருக்க முடியாத மனநிலை நாளடைவில் ஏற்பட்டு விடும். நோயைத் தீர்க்க வேண்டிய இவ்வெறி மயக்க மருந்துகள் பல்வேறு விதமான உடற்கோளாறுகளைத் தோற்றுவிப்பதோடு வெறித்தனமான செயல்பாடுகளால் ஒழுக்கச் சிதைவும் ஏற்பட ஏதுவாகிறது. மயக்க உணர்வு மட்டுமல்லாது அறிவும் மழுங்கி விடுகிறது. இதனால் சமூகத்திற்குத் தேவையற்ற, தீங்கிழைக்கும் மனிதராகவும் விரைவில் மாற நேர்கின்றது.

ஒரிருமுறை உண்டு பழகினால், அப்பழக்கத்துக்கு நம்மை அடிமை ஆக்கும் வல்லமை படைத்த வேறு சில போதை மருந்துகளும் உள்ளன. அவற்றுள் குறிப்பிடத் தக்கவை சல்பனால் மருந்து, கஞ்சா, ஈதர், குளோரால் குளோரோபாரம், பிரவுன் சுகர் மற்றும் பாரால்டிஹைடு முதலிய வெறி மயக்க மருந்துகளாகும்.

இவ்வெறி மயக்க மருந்துகளைத் தொடர்ந்து வழக்கமாக உட்கொள்வோரை இரு வகையினராகப் பிரிக்கலாம். முதல் வகையினர். நோய் போக்குவதற்காக உட்கொண்டு அதன் மூலம் அம்மருந்துகளுக்கு அடிமையாகிப் போனவர்கள். மற்றொரு வகையினர் ஏதோ ஒருவிதமான வெறி மயக்க இன்பத்துக்காக வென்றே இம்மருந்துப் பழக்கத்தை மேற்கொண்டு அடிமையானவர்கள். இதற்காக இவர்கள் தங்களுக்குத் தாங்களே ஊசி மூலம் வெறிமயக்க மருந்துகளை உடலுள் செலுத்திக் கொள்வதும் உண்டு.

பொதுவாக அறுவை மருத்துவத்தின் போது வலி தெரியாமலிருக்க ஹெரோய்ன் அல்லது மார்பீன் போன்ற மருந்துகளைத் தருவர். ஆனால், அறுவை மருத்துவம் முடிந்த பின்