பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜெகதீச சந்திரபோஸ்

305

நோயுண்டாக்கும் நச்சுக் கிருமிகளான வைரஸ்கள் உண்டு.

தக்காளி வைரஸ்

இவை வெவ்வேறு வடிவினவாகும். சில உருள் வடிவிலும் சில தட்டை வடிவிலும் உள்ளன, சில குச்சி வடிவிலும் உள்ளன. இவை விலங்கு நோய்களையும் தாவரநோய்களையும் அவ்வப்போது உண்டாக்குகின்றன.

இவற்றின் உருவம்தான் மிக மிக நுண்ணியவையே தவிர இவற்றால் உண்டாகும் இன்னல் மிகப் பெரியதாகும்.

இளம்பிள்ளை வாத வைரஸ்

இவை ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு வாய், மூக்கு வழியாக மிக விரைவாகப் பரவி விடுகின்றன. உடலுள் புகுந்தவுடனேயே உயிரணுப் போர்வையைத் துளைத்துக் கொண்டு உட் சென்று உயிரணுவுடன் தங்குகின்றன. உயிரணுவுக்கு வந்து சேரும் உணவுகளையெல்லாம் இவை உறிஞ்சி உண்டு கொழுத்துப் பல்குகின்றன. விரைவிலேயே உயிரணு அழிய நேர்கின்றது. தங்களுக்கு உணவளித்த உயிரணுக்கள் அழிந்தவுடன் உயிரணுச் சுவற்றின் படலத்தைக் கிழித்துக் கொண்டு இவை வெளியேறுகின்றன. முன்பு போலவே வேறு உயிரணுக்களைச் சென்றடைந்து மீண்டும் பழையபடியே உயிரணு உணவைப் பறித்துப் புசித்துப் பலவாகப் பெருகுகின்றன. இவற்றின் பெருக்கம் அதிகமாக நோயின் அறிகுறிகளும் அதிகமாகின்றன. முடிவில் நோய்க்கு நம்மை முழுக்க ஆளாக்கி விடுகின்றன.

சளி, களிக்காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களிலிருந்து இளம்பிள்ளை வாதம், அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள்வரை வைரஸ்களால் உண்டாகின்றன. அதேபோல் பன்றிக் காலரா, நாய்க்கு வெறி பிடித்தல், மாடுகளுக்குக் கோமாரி எனும் நோய் போன்றவை விலங்குகளுக்கு உண்டாகின்றன. தாவரங்களுக்கு இலைச் சுருட்டை போன்ற நோய்களை உண்டாக்குகின்றன. உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமையும் வைரஸ்களுக்கு உண்டு.

உடலுள் உள்ள வைரஸ்களை முழுமையாக அழிக்கும் முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை. எனினும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் சில முக்கிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் அம்மை, மஞ்சள் காய்ச்சல் போன்ற கொடிய நோய்கள் உண்டாகாமலும் பரவாமலும் தடுக்க சில மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை உடலுள் செலுத்துவதன்மூலம் நல்ல பலன் கிடைக்கின்றன.


ஜெகதீச சந்திர போஸ் : இந்திய அறிவியல் மேதைகளுள் குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியவராக விளங்குபவர் சர் ஜெகதீச சந்திர போஸ் ஆவார். இவர்தான் முதன்முதலில்

சர் ஜெகதீச சந்திரபோஸ்

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைக் கண்டுபிடித்துக் கூறியவர். இவர் வங்காள தேசத் தலைநகரான டாக்காவுக்கு அருகில் உள்ள காரிக்கல் எனும் கிராமத்தில் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் பகவான் சந்திரபோஸ் என்பதாகும்:

இவர் கல்கத்தாவில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில் படித்து வந்த போதே தாவரங்கள் பற்றியும் பிராணிகளைப் பற்றியும் நிறைய அறிய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தார். எனினும், தம் ஆசிரியரின் தூண்டுதலின் பேரில் இயற்பியலைப் பாட

20