அயோடின்
27
என எதுவுமே கிடையாது. எனவே ஒழுங்கான உருவம் ஏதும் இல்லாத இதன் வடிவம் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். இதனால் இது "மாறுதல்’ எனும் பொருளுடைய 'அமீபா' என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது.
ஓரளவு வளர்ச்சியடைந்த அமீபாவின் உட்கரு இரண்டாகப் பிரியும். பிரியும் கருவுடன் அதன் உடலும் இரண்டாகப் பிளவுபடும்.
இவ்வாறு அமீபா இரண்டு இரண்டாகப் பிளவுபட புதிய அமீபாக்கள் உருவாகிக் கொண்டே இருக்கும்.
அமீபா ஒரு ஒட்டுண்ணியுமாகும். இவை மனிதரின் உடலில் புகுந்து குடலில் தங்குகின்றன. அவை பெருங்குடலில் தங்கி குடற்சுவர்களில் குழி செய்து தங்கியும் துளை செய்து உட்சென்று பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இவற்றால் சீதபேதி எனும் வயிற்றுப் போக்கு ஏற்படும். வயிற்றுப்போக்குடன் வேறு சில நோய்களையும் உடல் உபாதைகளையும் அமீபாக்கள் ஏற்படுத்துகின்றன.
திறந்த வெளிகளில் மலங்கழிப்பதாலும் நீர் நிலைகளில் மலங்கழித்தபின் மலவாயைக் கழுவுவதாலும், சுத்தமில்லாத நீரைக் குடிப்பதாலும் அமீபாக்கள் உடலுள் புக ஏதுவாகின்றன.
மலத்தின் மூலம் இந்நோய் அதிகம் பரவுவதால் திறந்த வெளியில் மலங்கழிக்கக்கூடாது. ஈ, கரப்பான் பூச்சிகள் மொய்த்த பண்டங்களை உண்ணக்கூடாது. அமீபா பேதி வந்தவர்களோடு மற்றவர்கள் நெருங்கியிருக்கக் கூடாது. சுத்தத்தைக் கண்ணும் கருத்துமாகப் பாவித்தால் இந்நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அயோடின் : இது ஓர் அலோகத் தனிமம். 'அயோடின்’ என்பது கிரேக்கச் சொல்லாகும். அதற்கு ஊதா நிறம் என்பது பொருளாகும்.
மிகச் சிறிய அளவு அயோடின் காட்லிவர் எண்ணெயிலும், மனித உடம்பிலும் உள்ளது. பெருமளவு அயோடின் சோடியம் அயோடேட் என்னும் சேர்மத்திலிருந்து பெறப்படுகிறது. அயோடினின் அணு எண் 53.
நமக்கு எப்போதாவது கடுமையான சிராய்ப்போ காயமோ ஏற்பட்டால் கருநீல நிறமுள்ள 'அயோடின் டிங்க்ச்சர்’ என்ற மருந்தை உடனடியாக அதன் மேல் தடவுகிறோம். எரிச்சல் அதிகரித்தாலும் சிறிது நேரத்தில் மறைந்து குளிர்ச்சி உணர்வு உண்டாகும். இம் மருந்தைத் தடவினால் சீழ்பிடிக்காதது மட்டுமல்ல விரைந்து காயமும் ஆறிவிடும். இதற்குக் காரணம் இம்மருந்தில் அயோடின் கலந்திருப்பதேயாகும்.
அயோடினை முதன்முதலில் கண்டறிந்தவர் ஃபிரெஞ்சு வேதியியல் விஞ்ஞானி பெர்னார்டு கோர்ட்டாய்ஸ் என்பவராவார். ஆயினும் அதனை ஒரு தனிமம் எனக் கண்டுபிடித்தவர் லூ சர்ச் என்பவராவார்.
அயோடின் இயற்கைத் தனிமமாகக் கிடைப்பதில்லை. கடற்பாசியில் அயோடின் கலந்துள்ளது. கடற்பாசிகளைச் சேகரித்து அவற்றை எரித்து அச்சாம்பலிலிருந்து அயோடினைப் பிரித்தெடுக்கிறார்கள். காலிச் என்னும் வெடியுப்புத் தாதுவிலிருந்தும் அயோடின் பிரித்தெடுக்கப்படுகிறது. அயோடின் தண்ணீரில் அதிகம் கரைவதில்லை. ஆல்கஹால் எனும் எரிசாராயத்தில் நன்கு கரையும். ஆல்கஹாலில் கரைந்த அயோடினைக் கொண்டே ‘டிங்க்ச்சர் ஆஃப் அயோடின்’ எனும் காயங்களுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.
பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் தயாரிக்க அயோடின் அதிகம் பயன்படுகிறது. நமது உடலுக்கு அயோடின் ஒரு குறிப்பிட்ட அளவு தேவைப்படுகிறது. அது உடம்பில் கூடினாலோ குறைந்தாலோ உடல் நலம் கெடும். இது உடலில் குறைந்தால் கழுத்தின் முன்பகுதி வீங்கிவிடும். அயோடின் உடலில்