பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அரக்கு

அதிகமானால் உடல் மெலியத் தொடங்கும். படபடப்பு அதிகமாகும். எனவே அயோடின் உடலில் சீரான அளவில் இருக்குமாறு கவனித்துக்கொள்ள வேண்டும். அயோடினை நேரடியாக நாம் உட்கொள்ள முடியாது. அதனால் சமையல் உப்போடு சிறிதளவு சோடியம் அயோடைடு எனும் உப்பைச் சேர்த்து உண்ண வேண்டும். ஒளிப்படத் தொழிலுக்கும் அயோடின் அதிகம் பயன்பட்டு வருகிறது.

அரக்கு : இது ஒருவகை இயற்கைப் பிசின் ஆகும். அரக்குப் பூச்சிகளிலிருந்து வெளிப்படும் ஒருவகை திரவம் காற்றில் உலர்ந்து அரக்காகிறது. அரக்குப் பூச்சிகள் மூட்டைப் பூச்சி இனத்தைச் சார்ந்தவை. இவை ஒரே இடத்தில் இலட்சக்கண்க்கில் வாழும். எனவே தான் 'இலட்சம்’ எனும் பொருள்படும்படி

யாக'லாக்' (Lac) என்ற பெயரால் இப்பூச்சி அழைக்கப்படுகிறது.

அரக்குப் பூச்சிகள் எல்லா வகை மரங்களிலும் வாழ்வதில்லை. அவை பூவரசு, இலந்தை, பலாசு, காசுக்கட்டி போன்ற மரங்களிலேயே அதிகம் வாழ்கின்றன. மரங்களின் தன்மையைப் பொறுத்து அரக்குப் பூச்சிகள் அரக்கு திரவத்தைச் சுரக்கின்றன. அரக்கு திரவத்தை அவை தற்காப்புப் பொருளாகவே சுரக்கின்றன. அரக்குப் பூச்சிகள் மரச்சாற்றை உண்டு வாழ்கின்றன.

அரக்குப் பூச்சிகள் இயற்கையாக மரங்களின் கிளைகளிலும் குச்சிகளிலும் வாழ்வதுண்டு, அவை உள்ள குச்சிகளை அப்படியே ஒடித்து வேண்டிய மரக்கிளையில் கட்டி, அப்புதிய மரத்துக்கு அரக்குப் பூச்சிகளைப் புதிதாகக் குடியேற்றி வாழச் செய்வதும் உண்டு.

பெண் பூச்சிகளின் உடலிலிருந்து பிசின் போன்ற திரவம் சுரந்து மரக்கிளைகளில் படிகின்றன. இது ஒரு செ.மீ. கனத்துக்குப் படியும். இக்கிளைகளை வெட்டியெடுத்து அவற்

மரக்கிளையில் ஆண் பெண் அரக்குக் கூடுகள்

றில் உள்ள அரக்கைச் சுரண்டி எடுப்பார்கள். இதுவே 'கொம்பரக்கு’ எனப்படுவது. பின் அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலுள்ள அசுத்தங்களை அகற்றுவார்கள். இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட அரக்கு ‘மணியரக்கு' என அழைக்கப்படுகிறது. மணி அரக்கை மேலும் தூய்மைப்படுத்தித் தகடு வடிவில் தயாரிப்பர். இதுவே 'தகடரக்கு” எனப்படுவது.

அரக்கு நீரிலும் எண்ணெயிலும் கரையாது. ஒட்டும் தன்மையும் நீளும் தன்மையுமுள்ளது. அரக்கிலிருந்து பல்வேறு பொருள்கள் உருவாக்கப்படுகின்றன. இசைத்தட்டுகள், மரச் சாமான்கள், மின்தடைச் சாதனங்களின் மேற்பூச்சு, காகித அட்டைகள், நகச் சாயங்கள், கை வளையல்கள் ஆகியன தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. நீண்ட காலமாகவே அரக்குச் சாயம், கம்பளி, பட்டு, தோல் ஆகியவற்றிற்கு வண்ணம் ஏற்றப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மெருகெண்ணெய், வர்ணக்குச்சிகள், முத்திரை அரக்கு ஆகியவைகளும் அரக்கைக் கொண்டு தயாரிக்கப்பட்டு வருகின்றது. இசைக் கருவி விளையாட்டுச் சாமான்கள், நாற்காலி போன்றவைகட்கு மெருகேற்றவும் அரக்குப் பயன்படுகின்றது. கொம்