பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

ஆல்கஹால்கள்

பூக்களிலிருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. பழத்தோலிலிருந்து எண்ணெயும் பழத்திலிருந்து ஒருவகை மதுவும் தயாரிக்கிறார்கள்.

எலுமிச்சை (லெமன்), நாரத்தை (கடாரங் காய்), சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, பப்ளி மாஸ் ஆகிய பழங்கள் ஆரஞ்சு இன வகையைச் சேர்ந்தவைகளாகும். இவற்றில் சில புளிக்கும்.

ஆரியபட்டா : இவர் உலகப்புகழ் பெற்ற இந்திய வானியல், கணிதவியல் மேதையாவார். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் ‘ஆரிய பாட்டீயம்’ எனும் அரிய நூலை எழுதியுள்ளார். இந்நூல் கணிதவியலின் பல்வேறு கூறுகளையும் வானியல் பற்றிய அரிய செய்திகளையும் தொகுத்து வழங்குகிறது. கவிதை வடிவில் அமைந்துள்ள இந்நூல் ஐந்தாம் நூற்றாண்டில் இந்தியர்களின் கணித வானியல் கண்டுபிடிப்புகளை உலகத்துக்குப் பறை சாற்றி, இத்துறை சார்ந்த உலக மேதைகளை வியக்க வைத்துள்ளது. இந்நூல் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் நிகழும் நில உலகச் சுழற்சி பற்றியும் சூரியகிரகணம், சந்திர கிரகணம் பற்றியும் மற்றும் இயல்பு எண்கள் (Natural Numbers) பற்றியும் அவைகளின் இருமடிகள் (Squares) பற்றியும் அவைகளின் இருமடிகள் (Squares) மும்மடிகள் (Cubs) கூடுதல் ஆகியன பற்றியும் அவற்றைக் கணிக்கச் சரியான பொது முறைகளை வகுத்து உலகுக்கு வழங்கிய பெருமை இவரையே சாரும்,

இவரைப்போன்ற மற்றொரு கணித வானியல் மேதை பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்துள்ளார். அவர் பெயரும் ஆரியப்பட்டா என்பதேயாகும். எனவே, இவர்களைப் பிரித்தறிய முன்னவர் ஆரியபட்டா I என்றும் பின்னவர் ஆரியபட்டா II என்றும் குறிக்கப்படுகின்றனர்.

ஆரியபட்டா 1 கி.பி. 9ஆம் ஆண்டில் வானியல் நுட்பங்களை விளக்கும் அரிய நூலொன்றைப் படைத்துள்ளார். பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் அரிய படைப்பாகக் கருதப்படுகிறது.

ஆரியபட்டா II எழுதிய கணிதவியல் நூலான 'மகாசித்தாந்தா’ அரிய கணிதவியல் ஆய்வு நூலாகப் போற்றப்படுகிறது. இதில் உள்ளபடி கணிதா, குட்டகணிதா, பீஜ கணிதா ஆகிய முப்பெரும் பிரிவுகளில் பணிதத்துறையின் பல்வேறு கூறுகள் ஆராயப்படுகின்றது.

ஆரியபட்டா ( செயற்கைக் கோள் ) : ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மாபெரும் இந்திய வானியல் கணித மேதையான ஆரிய பட்டாவின் நினைவாக அவர் பெயரிடப்பட்ட முதல் இந்தியச் செயற்கைக்கோள் இது ஆகும் இஃது 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள் சோவியத் நாட்டு விண்வெளி ஏவுதளத்திலிருந்து விண்வெளியில் ஏவப்பட்டது.

ரஷ்யா உட்பட எட்டு நாடுகளின் உறு துணையோடு இச்செயற்கைக்கோள் திட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்செயற்கைக்கோள் உருவாக்கத்திற்கென சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவாகியது. இதனை உருவாக்க

ஆரியபட்டா செயற்கைக்கோள்

250 பொறியாளர்கள் 26 மாதங்கள் கடும் உழைப்பைச் செலவிட்டனர். இச்செயற்கைக் கோள் பூமியிலிருந்து சுமார் 695 கி.மீ.உயரத்தில் அமையுமாறு ஏவப்பட்டது. இது உலகை ஒருமுறை சுற்றிவர 96.6 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது. ஒரு நாளைக்கு 15 சுற்றுக்கள் வீதம் உலகைச் சுற்றி வந்தது. இதன் சராசரி வேகம் விநாடிக்கு 8 கி.மீ. ஆகும். இதன் இயக்கம் ஆறு மாதங்கள் மட்டுமே.

ஆல்கஹால்கள் : இது ஒருவகை வெறியம் அல்லது சாராயமாகும். பள்ளிக்கூடச் சோதனைச் சாலையில் சாராய விளக்குப் பயன்