பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைப்பார்வை

59

ஒளி அலைகள் ஒலி அலைகளைவிட விரைவாக நம்மை அடைவதேயாகும்.

சில சமயம் பூமிக்கு அருகாக மின்னல் ஏற்படும். அப்போது உண்டாகும் மின்சாரம் அருகாக உள்ள கட்டிடங்கள் மரங்கள் மூலம் மின்சாரம் பூமியை நோக்கிப் பாயும். அப்போது ஏற்படும் அபரிமிதமான வெப்பத்தால் மரங்கள் கருகிவிடும். கட்டிடங்கள் மீது பொருத்தப்பட்டிருக்கும் கம்பி வழியாக மின்சாரம் பாய்ந்து பூமிக்குள் சென்றுவிடும்.

மின்னல் தாக்கும்போது மரங்கள் மட்டுமல்ல மனிதர்கள், ஆடு, மாடு போன்ற மிருகங்கள் கருகிச் சாக நேரிடும். இடி தாங்கி இல்லாத கட்டிடங்கள் எரிகின்றன. சுவர்களில் பிளவு ஏற்படுகிறது. இதைத்தான் 'இடிவிழுதல்' என அழைக்கிறோம். இடி, மின்னல் ஏற்படும் சமயங்களில் மரங்களின் அடியில் இருக்கக் கூடாது. அது உயிருக்கு ஆபத்தாகும். இரும்புப்பிடி கொண்ட குடையை மழைக் காலத்தில் பயன்படுத்தக் கூடாது. மழையில் நனைந்து செல்லும்போது உலோகப் பொருள்களை உடலுடன் ஒட்டி எடுத்துச்செல்லக் கூடாது.

பெரும் கட்டிடங்கள் இடியாமல் பெரும் சேதம் அடையாமல் இருக்கும் பொருட்டு அவற்றின் இடி, மின்னலால் உண்டாகும் மின்சாரத்தை உட்கொண்டு பூமிக்குள் செலுத்தும் தன்மையுடைய இடிதாங்கிக் கம்பியைப் பொருத்துவார்கள். அக்கம்பிகளின் ஒரு முனையை பூமிக்குள் இருக்குமாறு வைப்பார்கள். மற்றொரு முனையை கட்டிடத்திற்கு மேலாக மேல் நோக்கி இருக்குமாறு கூர்மையான முனையுடன் அமைப்பார்கள். இதற்குத் தடித்த பட்டையான செப்புக்கம்பியைப் பயன்படுத்துகிறார்கள். இடிதாங்கிக் கம்பி பொருத்தப்பட்ட கட்டிடத்திற்கு அருகே மின்னல் உண்டாகும்போது வெளிப்பாயும் மின்சாரம் கம்பி வழியே தரையை எளிதாக அடைகிறது. இதனால் கட்டிடம் எவ்விதப் பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்ப வழியேற்படுகிறது. இடிதாங்கிச் செப்புக் கம்பி 2.6 செ.மீ. அகலமும் 2 செ.மீ. தடிப்பும் உடையதாக இருக்கும்.

மின்னலில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் தகடு மின்னல், நாடாமின்னல், பாசி மின்னல், வெப்ப மின்னல், பந்து மின்னல், அலை மின்னல் ஆகியன முக்கியமானவை களாகும்.

மின்னல் ஏற்படுவதால் பலவித நன்மைகளும் காற்று வழியே பாயும்போது அயனியாக்கப்பட்ட காற்றினால் நைட்ரஜன் ஆக்சைடும் ஓஸோன் எனும் ஒருவகை ஆக்சிஜனும் உற்பத்தியாகின்றன. தாவரங்கள் நன்கு செழித்து வளர நைட்ரஜன் ஆக்சைடு உரமாகப் பயன்படுகின்றது.

இடிதாங்கியைக் கண்டு பிடித்து முதன்முதல் பயன்படுத்தி வெற்றி கண்டவர் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஆவார்.

இணைப்பார்வை தொலைநோக்கி : (Binocular Telescope) : இதை 'முபட்டை இணைப்பார்வை நோக்கி’ என்றும் கூறுவர். சாதாரண தொலைநோக்கியைவிட இது இரு வகைகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது. முதலாவது பார்க்கும் பொருளின் பிம்பம் லென்சின் உதவியின்றி நேராக விழுகின்றது. இரண்டாவது ஒளிக்கதிர் ஒவ்வொன்றும் முப்பட்டையின் எதிரொலிப்பினால் மூன்று மடங்கு தொலைநோக்கியின் நீளத்தைக் கடந்து செல்வதால் மூன்று மடங்கு நீளமுள்ள தொலைநோக்கியின் மூலம் பார்த்தால் எவ்

இணைப்பார்வை தொலைநோக்கி (உட்புறத் தோற்றம்)

வளவு உருப்பெருக்கம் பெற முடியுமோ அவ்வளவு உருப்பெருக்கை இதன்மூலம் எளிதாகப் பெற முடிகிறது. மேலும் கையடக்க வடிவில் இருப்பதால் கையாளுவதும் எளிது. காணும் காட்சிப் பொருளும் தெளிவாகத் தெரியும். இதைக் கப்பலிலிருந்தும் போர் முனைகளிலிருந்தும் தொலைவிலுள்ளவற்றைத் தெளிவாகப் பார்த்துச் செயல்பட இக்கருவி உதவுகிறது.