பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈஸ்ட்

75

பூமிக்கு அடியிலேயேயும் அமைந்திருக்கும். இறகு முளைத்த கறையான்கள் நன்கு வளர்ச்சியடைந்த ஆண்-பெண் ஈசல்களாகக் கருதப்படுகின்றன. இவை மழை தொடங்கு முன்னரோ ஈரக்காற்று பரவியுள்ளபோதோ புற்றினின்றும் ஆண்-பெண் இணைகளாகப் பெருமளவில் புற்றினின்றும் வெளிப்படும். இரவு நேரத்தில் விளக்கு வெளிச்சத்தை நாடி கூட்டங்கூட்டமாக வெளிப்பட்டு விளக்கில் மோதி மடியும். விளக்கை நெருங்கும்போதே அவற்றின் மெல்லிய இறக்கைகள் உதிர்ந்துவிடும். இறக்கை இழந்த ஈசல்கள் விளக்கு அருகிலேயே விழுந்துவிடும். இவ்வாறு விழும் ஈசல்களைச் சேகரித்து வறுத்து உண்பர். ஈசல்களை சிலவகை உயிரினங்களும் விரும்பி உண்கின்றன. ஈசல்கள் கடிப்பதில்லை. இவை முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப் பெருக்கம் செய்கின்றன.

ஈரல் : நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளான கல்லீரல், மண்ணிரல், நுரையீரல் ஆகியவற்றைக் குறிக்கும் சொல்லாக அமைந்திருப்பினும் கல்லீரலைக் குறிப்பாக உணர்த்தும் சொல்லாகவே இருந்து வருகிறது.

கருஞ்சிவப்பு நிறமுடைய கல்லீரல் வயிற்றின் வலப்புறமாக நடுச் ஜவ்வின் அடியில் அமைந்துள்ளது. அதன் கீழே சிறுகுடலும் வலப்பக்கம் சிறுநீரகமும் உள்ளன. மண்ணீரல் வயிற்றின் இடதுபுறமாக அமைந்துள்ளது. நுரையீரல் இதயத்தின் வலதுபக்கம் பெரும்பான்மையும் இடப்பக்கம் சிறுபான்மையுமாக அமைந்துள்ளது.

கல்லீரலின் எடை 1.5 கி. கிராம். உடல் உறுப்புகளிலேயே மிகப்பெரிய உறுப்பு கல்லீரல்; அதிக எடை உள்ளதும் இதுதான்.

கல்லீரலை குறுக்காக பிளந்து பார்த்தால் அதனுள் கொசுவலை போல ஏராளமான சிறு சிறு குழிகள் இருக்கும். அதில் பல்லாயிரக் கணக்கான சுரப்பிச் செல்கள் இருக்கும். இச் செல்களுக்கு இடையே 'பித்தநீர் வடிகால்’ எனப்படும் சிறிய துவாரங்கள் இருக்கும். இவற்றில்தான் கல்லீரலின் செல்கள் ஒருவகை திரவத்தைச் சுரக்கின்றன. அதற்கு 'பித்த நீர்’ (Bile) என்று பெயர். இந்த பித்தநீர் பித்த நாளங்கள் வழியாகக் சென்று கல்லீரல் நாளமாக மாறி கல்லீரலை விட்டு வெளியேறி பித்தப் பையில் சேரும்.

ஒரு நாளில் 700மி.லி.லிருந்து 1,200 மி.லி. பித்தநீர் கல்லீரலில் சுரக்கிறது. இவற்றின்

கல்லீரல் உறுப்புகள்

பணி-உணவில் உள்ள கொழுப்புப் பொருட்களைக் கூழாக்குவது; கொழுப்பு அமிலங்களை எளிதில் கரைப்பது; கொழுப்புச் சத்துக்களை சீரணிக்க உதவுவது; குடல் இயக்கங்களை விரைவுபடுத்துவது.

கல்லீரல் நாம் சாப்பிடும் உணவில் உள்ள மாவுச் சத்தை கிளைக்கோஜனாக மாற்றி சேமித்து வைக்கிறது. நாம் சில நாட்கள் வரை சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அப்போது இந்த சேமிப்பு கிளைக்கோஜன் தான் உடல் சக்திக்கு உதவுகிறது.

இரத்தத்தில் காணப்படும் நச்சுப் பொருட்களை அகற்றுவது கல்லீரல்தான். இரத்தத்தைச் சேமித்து விபத்து நேரங்களில் இழந்த இரத்தத்தை ஈடுசெய்ய இரத்த ஓட்டத்திற்கு உதவுவதும் கல்லீரல்தான்.

ஈஸ்ட் : அரைத்த மாவு புளிப்படைவதற்கும் (பிரை குத்திய) பால் தயிராக உறைவதற்கும் காரணம் அவற்றில் ஈஸ்ட் எனும் நொதித்தல் ஏற்படுவதேயாகும். நொதித்தல் எனும் செயல் நுண்ணுயிர்களால் ஏற்படுவது. பால் மாவு, பழச்சாறு இவைகளில் நொதித்தல் எனும் புளிப்புச் சுவையை உருவாக்கும் செயல் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. மதுபானத் தயாரிப்புக்கு நொதித்தல் ஆகிய ஈஸ்ட்டே அடிப்படையாகும்.