பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் விடு. இல்லையாயின் உனக்குத் தகுந்த புத்தி கற்பிப்பேன்."

என்று கூறிய வண்ணம் பின் வாங்கி நின்றேன்.

"உன் மதிவதனந்தான் என்ன உளறி வழிய வைக் கிறது புவன எதோ ஒரு முத்தம் கொடுத்துவிடு. நான் போய்விடுகிறேன். இல்லாவிட்டால் உன் பாதத்தடியி லேயே விழுந்து உயிரை விட்டுவிடுவேன். அப்புறம் நீ தான் பழிகாரியாகிவிடுவாய்” என்று சம்பத் வாயில் வந்தவாறு பிதற்றி மீண்டும் என்மீது பாய்ந்தான். -

அச்சமயம் எனக்குண்டான தீவிர உணர்ச்சியை என் னென்பேன்! நான் என் கைகளை நன்முக மடக்கிக்கொண்டு என்னேப் பற்ற வந்த புரொபளரை ஓங்கி ஒரு குத்து விட் டேன். குத்து பலமாக விழுந்தும் சம்பத் ஐயங்கார் அதைப் பொருட்படுத்தாமல் 'நீ யடிக்காது என்ன வேறு யார் அடிக்கப்போகிருர்கள்? மல்லிகைச் செண்டால் அடிப்பது போலவன்ருே இருக்கிறது; நீ குத்திய குத்து?” என்று என் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கொஞ்சத் தொடங்கினன்.

நான் அவன் கைப்பிடியினின்றும் விடுபட முயன் றேன். என்உடம்பைப் பலவிதமாக வளைத்துத்திமிறினேன். என் பல்த்தையெல்லாம் உபயோகித்துப் பார்த்தேன். ஆக் திரத்தால் அவன் முகத்தில் காறி யுமிழ்ந்தேன். கரங்களால் மாறி மாறி யுதைத்தேன். இம்முறை அவன் சிறிது திடசித் தத்தோடேயே இருந்தானதலால், இதற்கெல்லாம் அவன் தளர்ச்சி யடையவில்லை. அவன் பிடித்தபிடி குரங்குப்பிடி யாகவே இருந்தது. பார்த்தேன்; அவனிடம் இதமாகப் பேசியே தப்பித்துச் செல்ல வேண்டுமென்று தீர்மானிக் தேன். எனவே, கான் புரொபலரை நோக்கி சார் நீங் கள் என்னிடம் வைத்திருக்கும் அன்பை இப்போதுதான்