பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#14 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

நிகழ்ச்சிகளும் தம் மினத்தவராகிய ஆடவர் முன்னிலையி லேயே கடந்திருந்தாலும், அவர் அவ்வளவாக அவமான உணர்ச்சியால் மனங் குன்றி யிருக்கமாட்டார். பெண் ணெதிரே-அதிலும் என் போன்ற ஓர் இளம் பெண் ணெதிரே-அம்மனிதர் தம் விஷயங் தெரிந்த ஒருவரால் பரி கசிக்கப்படுவது-அவள் எளனமாகச் சிரிப்பது-என்ருல், ஆண்மகனென்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் எவனுக் குத்தான் அவமான முண்டாகாது? எனவே, அந்த இன்வி யூரன்ஸ் ஏஜண்டு வாப் திறந்து ஒன்றுஞ் சொல்லாமல், என் தந்தையின் பக்கங் திரும்பிமட்டும் ஹாட்டைத் தாக்கி வங் தன மளித்துவிட்டு, எங்களையெல்லாம் ஏறிட்டுப் பார்க்கா மல் வெகு வேகமாக வெளியே போய்விட்டார்.

அவர் ஒர் அடி வெளியே எடுத்து வைத்தாரோ இல் லேயோ ஆலால சுந்தர முதலியார் நாங்களிருந்த அறையே அதிர்ந்து போகும்படியாகக் கைகொட்டிச் சிரித்தார். அவ் வாறு சிரித்தபோது அவரது தொந்தி குலுங்கியதைக் கண்டு எனக்கு நகைப்பேற்பட்டாலும், அந்த ஏஜண்டின் பரிதாப மான கிலேமைக்காக மனம் வருந்தினேன்.

என் தந்தை ராமனே வெளியே போகும்படி சைகை செய்துவிட்டுத் தம் சிநேகிதரைப் பார்த்து, உட்காருங்கள் முதலியார்-என்ன அந்த ஆசாமியை உங்களுக்குத் தெரியுமா?’ என்று மீண்டுங் கேட்டவண்ணம் தாமும் ஒரு சோபாவில் உட்கார்ந்தார். -

ஆலாலசுந்தர முதலியார் எதிரிலுள்ள மற்ருெரு சோபாவில் அமர்ந்த வண்ணம், தெரியாம லென்ன? உங் கணப் போன்ற பணக்காரர்கள் அவனைத் தெரிந்துகொள் ளாமலிருக்க முடியாது. நீங்கள்மட்டும் இதுவரை அம் மனிதனது கண்ணில் அகப்படாமல் இருந்தது எவ்வாறு