இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
124
இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
மற்றொரு பெண் அவர் முகத்தில் நீரைத் தெளிவித்தாள். வேறொருத்தி தன் சேலையின் முந்தானையால் விசிறிக் காற்றை யுண்டாக்கினாள்.
இவ்வாறு மாணவிகளாகிய நாங்கள் அனைவருமே எங்களுக்குத் தோன்றிய வண்ணமெல்லாம் சைத்தியோப சாரங்களைச் செய்யவும், மஹிளாதேவி சிறிது நேரத்திற்கெல்லாம் மூர்ச்சை தெளிந்து கண்ணைணே விழித்துப்பார்த்தார். நாங்கள் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், என்ன