பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் என்ருல் என்ன பூதமா? பேயா? 201

போய்க் கொண்டிருந்தனர். அங்கும் ஏழைகளின் கூட் டம் என் கண்களுக்குக் காட்சி யளித்தது. நதியில் யாரே னும் தவறியோ, தற்கொலே செய்துகொள்ள வேண்டு மென்ற நோக்கத்துடனே விழுந்துவிடாமல் கவனிப்பதற் காகப் போலீஸார் அங்கு சுற்றிக்கொண்டிருந்தனர்.

எனக்குப் படகில் ஏறி நதியைச் சுற்றிவர வேண்டு. மென்று ஆசை யுண்டாயிற்று. அதைச் சத்திய காதரிடம் குறிப்பிடவே, அவர் ஒரு படகை வாடகை பேசி யமர்த்தி ர்ை. சாங்கள் இருவரும் எறியபின், சத்தியநாதரே பட கைத் துடுப்புக்களால் தள்ளிச் செலுத்தினர். நான் அந் நதியில் மிதந்து மீன்களைக் குத்தித் தின்று விளையாடிக்

கொண்டிருக்கும் நாரைகளையும், வாத்து முதலிய பறவை களையும் பார்த்துக் கவனித்தவண்ணம் ஏதோ உரையாடிக் கொண்டிருக்கையில் சத்திய நாதர் என்னைக் கனிவாக

14