216
இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்
டுப் படிகள் வழியாக இறங்கி ஓடினான். நானும் அரை மனதுடன், அவனை வழியனுப்பி, மேல் தளத்தில் ஓரத்தில் நின்று, அவன் கப்பலை விட்டு இறங்கும் வரை கவனித்துக் கொண்டிருந்தேன். கப்பல் புறப்படுவதற்குக் கால் மணி நேரத்துக்கு முன்னரே, பிரயாணிகளும், மாலுமிகளும், கப்பல் அதிகாரிகளும் தவிர, வழியனுப்ப வந்த மற்றவர்கள் இறங்கிப் போய் விட வேண்டுமாதலால், காப்டன் ஊது குழல் ஊதியதும் கப்பல் புறப்பட்டு விட்டது! ஆகவே, ஜான் கில்பர்ட் எவ்வளவு வேகமாக ஓடியும், கடைசியில் ஓடும் கப்பலிலிருந்து குதித்தே இறங்க வேண்டியிருந்தது. அவன் ஆழமான அவ்விடத்தில் நீந்தி, பிறகு ஒரு ஸ்டீம் லாஞ்சில் ஏறித் துறைமுக மேடையையடைந்தான். இதைப் பார்த்த போது, அவன் என்னிடம் எவ்வளவு ஆழ்ந்த அன்பு வைத்திருக்கிறான். எனக்காக எவ்வளவு தூரம் பாடுபடுகிறான் என்று மலைத்துப் போய், அவனைப் பற்றிய சிந்தனையாகவே சென்றேன்.
பதின்மூன்றாவது அதிகாரம்
தந்தை பிரிவும், குடும்பச் சீரழிவும்
பம்பாய் துறைமுகத்தில் என்னை எதிர் கொண்டழைத்தவர் ஒரு மெலிந்த தேகமுடைய மனிதர். என்னை வரவேற்க என் தந்தை, சிற்றப்பா முதலியவர்கள் வந்திருப்பார்கள் என்று எதிர்பார்த்த வண்ணம், கைப்பெட்டியையும் மற்றுஞ் சாமான்களையும் எடுத்துக் கொண்டு, சுற்று முற்றும் பார்த்தேன். இச்சமயத்தில், என்னருகே வந்த மெலிந்த மனிதரைப் பார்த்தும், அவரைக் கவனியாது நாலா பக்கமும் கண்களைச் சுழல விட்டு, “நீர் யார்? என் தந்தை முதலி-