பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ப்பக்குறி யறிந்த தாய் மரணம் 233

பிடிக்கவில்லை. நான் எங்காகிலும் போய் முயன்று. பார்த்து என் தாயைக் காப்பாற்ற வேண்டுமென்ற உறுதி கொண்டேன். - * - - .

நான் இவ்வாறு மனதில் முடிவு செய்தேனே யொழிய என் உடல் கிலே அதற்கு இடத்தரவில்லை. சில நாட்க ளாகவே, என் தேகம் சரியான நிலையிலில்லை. அடிக்கடி அயர்வு ஏற்பட்டு வந்தது. படிப்படியாக என் உடம்பு பலவின மடைந்து வருவதாக உணர்ந்தேன். இந்த விட் டுக்கு வந்ததற் கப்புறம் இருந்தாற்போலிருந்து மயக்கம் வர ஆரம்பித்தது. உணவு சரியாகப் பிடிப்பதில்லை. மீறிச் சாப்பிட்டாலும், வாந்திவரத் தொடங்கியது. இந்நிலையில் நான் ஒன்றை நினைக்கவோ, செய்யவோ முடியவே யில்லை. நாளெல்லாம் படுத்துக்கொண்டேயிருந்தால் சுகமா யிருக்கும்போலிருந்தது. எனது அசதி கிலே யைக் கண்டு என் தாய் துடி துடித்தாள். உடம்பு என்ன பண்ணுகிறது. என்பதை யறிய டாக்டரிடஞ் செல்வதற்குக்கூடக் கதியில் லேயே என்று ஏங்கினுள். -

ஒருநாள் அதிகாலே நான் படுக்கையைவிட்டு எழுச் திருக்க முயன்றேன். உடனே மயக்கம் போட்டு அதன் மீதே விழுந்துவிட்டேன். இச்சப்தத்தைக் கேட்டு தாழ்வா ரத்தில் ஏதோ வேலையாயிருந்த என் தாய் ஓடிவந்து ஆடை யொருபுறம் காைெரு புறமாய் அலங்கோலமாகக் கிடந்த என்னே வாரி யெடுத்துச் சிரம ப்ரிகாரஞ் செய்தாள். அப் போதும் என்னல் படுக்கையைவிட்டு எழ முடியவில்லை. எனவே என் தாய் பக்கத்து வீட்டிலிருந்த கமலம்மாளைக் கூப்பிட்டு வந்து என்னைக் காண்பித்தாள்.

வயது. சென்ற அந்த அம்மாள் என்னைக் கூர்ந்து கவ. னித்துவிட்டு என் காயை ஆச்சரியமாகப்பார்த்து என்.

16