பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

ன்ம்மா! உனக்கு இது தெரியவில்லையே?-ஆமாம். இந்தக் குழந்தைக்கு இன்னும் கலியாணமாக வில்லையாக்கும் என் றல்லவோ நான் நினைத்திருந்தேன்?-உன் மகளுக்கு விவாக மாப்விட்ட சமாசாரத்தை ஏன் என்னிடம் கூறவில்லை. லாஷ்மியம்மா! நாங்க ளெல்லாம் அதைத் தெரிந்து கொள் ளப் படாதா?’ என்று கேட்டாள். -

என் தாய், என்ன அம்மா! நீங்கள் சொல்வதே எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே' என்று சந்தேகத் தோடு வினவினுள். w .

இச்சமயத்தில் எதிர்வீட்டு ஜகதாம்பாளும், அவள் மக ரூம், புவனவுக்கு என்ன உடம்பு என்று கேட்டுக் கொண்டே வந்தனர். -

கமலாம்மாள் இவர்கள் வந்ததையுங் கவனியாமல் என் தாயை நோக்கி என்ன விளங்கவில்லை? புவன கர்ப்பமாக வன்ருே இருக்கிருள்? கர்ப்பக் குறிகள் தான் நன்முகத் தெரிகிறதே! பெண்ணுய்ப் பிறந்தவர்களுக்கு இது கூட்வா தெரியாது? அதுவுக் காயறியாத சூலா!............” என்று நீட்டிப் பேசிள்ை. - - -

இவ்வார்த்தையைக் கேட்டதும் . நான் துணுக்கும் றேன். என் தாய் துள்ளி யெழுந்து, என்ன என்ன! கர்ப்பமா? புவனவா கர்ப்பமாக இருக்கிருள்? இதென்ன கொள்ளை, ஐயோ கடவுளே...........! என்று கூறி யலறிய வண்ணம் மூர்ச்சித்து விழுந்தாள். பக்கத்தி லிருந்தவர்கள். என் தாயைத் தாங்கிப் பிடித்தனர். என் தாயின் உடல் துவண்டது. . - -

என் தாயின் நிலையைக் கண்டதும், நான் மெய்ம் மறந்து.'ஆ' அம்மா......" என்று அலறிக் கொண்டே எழுந்தேன். ஆனல் என் தலே கிறு கிறுத்தது.