பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

238 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன் வார்த்தையும் செயலும் எனக்கு மேலுங் குழப்பத்தை யுண்டுபண்ணியது. "ஐயோ! அப்பா! என்னப்பா இது! எனக்கு உண்மை சொல்லக் கூடாதா! அம்மாளுக்கு என்ன நேர்ந்து விட் டது! டாக்டரையாகிலும் போய் அழைத்துவாயேன்! அப்பா! ஏனப்பா! விழிக்கிறாய்! டாக்டருக்கு பீஸ் (Fees) கொடுக்க வேண்டுமே! எங்கே போவது!' என்று யோசிக் கிறாயா! அதற்கு என் கையில் இருக்கிற வளையல்களைக் கழற்றித் தருகிறேன். தயங்காதே அப்பா........என்னம்மா - என்னைப் பெற்ற அம்மா இப்படிக் கிடப்பதைக் காண எனக்குச் சகிக்கவில்லையே! இன்னும் என்ன அப்பா எண்ணுகிறாய்? சொல்லேன். வாயைவிட்டு என்னிடஞ் சொல்லேன்........” என்று கதறிப் பதறிப் பிரலாபித்தேன், நான் என் சிற்றப்பாவின் மீது விழுந்து அவரைப்பிடித் துக் குலுக்கித் தொந்தரவு செய்தும், அவர் சித்தப் பிரமை கொண்....வர்போல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார். ' பிறகு அவர் ஏதோ பேசத் தொடங்கியவர் கமலம் மாள் முதலியவர்களைத் - திரும்பிப் பார்த்தார். அவர்கள் யாருங் காணப்படவில்லை. அவர்கள் எங்களுக்குத் தெரியா மலே மெல்ல நழுவிவிட்டார்களென்று தெரிந்தது. எனவே, அவர் ஒருவிதமாகத் தலையை யசைத்து விட்டுப் பின் என்னை கோக்கி, "அம்மா புவனா நீ அழாதே! அம்மாவைப் பார்த் துக் கொண்டிரு. நான் இதோ போய் டாக்டரை யழைத் துக்கொண்டு வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.. நான் ஒன்றும் தோன்றாமல் என் தாயின் பக்கத் கமர்ந்து அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன். என்னை யறியாமலே கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்த வண்ண மிருந்தது.