பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெண்ணு பேயா தெய்வ மகளா!! ! 2].

இவையெல்லாம் அவையவை இருக்கவேண்டிய இடத்தில் ஒழுங்காக வைக்கப்பட்டிருந்தது, அவளது மனத்தின் செம் மையைக் காட்டியது. தன் உபயோகத்துக்கு வேண்டிய ச. மான்களை யெல்லாம் இப்பெண்ணே செய்து கொண் டிருக்கிருள் என்பதை அவைகளின் அமைப்பிலிருந்து ஒரு வாறு ஊகித்துக்கொண்டேன். முற்றும் துறக்க முழு முன்ரிவரது ஆசிரமங்கூட இவ்வளவு தூய்மையாகவும் திருத்தமாகவும் இருக்காது என்று துணிந்து கூறுவேன். இவளது விசித்திர வாழ்க்கையையும், சங்கியாச (அக்கத்து வத்தில் இல்லாவிடினும்) நிலைமையுங் கூர்ந்து காணக் காண எனக்கு ஆச்சரியமே மிகுந்தது.

இதற்குள் அப்பெண்மணி, பூக்குடலேகள் ஒன்றி

விருந்து பழ வகைகள் சிலவற்றை எடுத்து ஒரு பிரப்பந்தட் டில் வைத்து என் முன் கொண்டுவந்தவள், யான் ஆழ்ந்த சிந்தனையி விருப்பதைக் கண்டு அப்படியே கின்று, என்ன! எதோ பலமான யோசனையில் ஆழ்ந்திருக்கிருப்போ விருக் கிறது. ஏதேனும் உலகத்தின் முக்கிய பிரச்சினை யொன் றைத் தீர்த்து வைக்கவேண்டிய பொறுப்பு உமக்கு ஏற்பட் டிருக்கலாம் என்று கினேக்கிறேன். அப்படித்தானே!" என்று சிரித்துக்கொண்டே கேட்டாள். -

அவளது குறுபுத்தனமான கேள்வியைக் கேட்டு எனக்கும் நகைப்பு வந்துவிட்டது. நான் என்ன உல கத்தை உய்விக்க வந்த தலைவன? அல்லது சக்கரவர்த்தியா? உலகப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கு அப்படி யொன்றுமில்லை. இம்மலைப் பிரதேசத்தில் இயற்கை யன்ன யளிக்கும் அற்புதக் காட்சியில் என் மனம் இலயித்துப் போய்விட்டது. ஆண்டவனது படைப்புத் திறத்தையும் அருள் விளக்கத்தையும் இங்குதான் நன்ருகக் காண்கி றேன்” என்று உணர்ச்சியோடு கூறினேன்.