உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



படித்த மகளின் விபரீதப் போக்கு

77

வரை அத்திக்கையே பார்த்துக் கொண்டிருந்த புவனசுந்தரி பின்னர் என் பக்கமாகத் திரும்பியவள், நான் மெய்க் கூச்செறிந்து நிற்பதையும், பெருமூச்சு விடுவதையுங் கண்டு கலகலவென நகைத்துக் கொண்டே என்னை நோக்கி வந்தாள். அப்பா! அச்சிரிப்பில் எவ்வளவு பொருள் அடங்கியிருந்தது? நானும் மிகவுஞ் சிரமப்பட்டுச் சிரிப்பை வருவித்துக் கொண்டேன்.

என் அசட்டுச் சிரிப்பையுணர்ந்த புவனசுந்தரி, “தோழரே! மிருகங்களின் சண்டை எப்படியிருந்தது? இதைக் கண்டு நீர் பயப்பட்டீரல்லவா?” என்று கேட்டாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. எனவே, வாய் திறவாது வாளாயிருந்தேன்.



ஐந்தாவது அதிகாரம்


படித்த மகளின் விபரீதப் போக்கு

கவே, அவள், என்னைக் குடிசைக்குள் அழைத்துச் சென்ற வண்ணம், “இதெல்லாம் ஒன்றுமில்லை; நாய், பூனை சண்டை போடுவது மாதிரிதான் இக்காட்டு மிருகங்களின் சண்டையும். இவைகளின் சண்டையைப் பார்ப்பதில் எனக்கு மிகவும் பிரியம். இது போன்ற சம்பவம் உமக்குப் புதிதல்லவா! அதனால், உமக்கு மன அதிர்ச்சி யேற்பட்டிருக்கலாம். அதிருக்கட்டும்; இப்போது பன்னிரண்டு மணிக்கு மேலாகி விட்டது. நீர் சிறிது கண்ணுறங்கலாமல்லவா!” என்று வினவினாள்.

எனக்குத் திடீரென்று ஏற்பட்ட இக்கலவரம் ஒன்று; எற்கனவே, புவனசுந்தரியின் வரலாற்றில் என் மனம் மிக-