பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்த மகளின் விபரீதப் போக்கு 81.

மயங்கிப் போய்விடுவது பெண்களாகிய நமக்கு இயற்கை யாக இருக்கிறது. ஆடவர்கள் தங்கள் இச்சையைப் பூர்த்தி செய்துகொள்ள முயலும்போது நம்மைக் கண்ணே! பெண்ணே மணியே! என்றெல்லாம் கெஞ்சிக் கொஞ்சிக் கூத்தாடுகிருர்கள். அதற்கப்புறம் நாயே! பேயே! வேசையே! என்று வாயில் வந்தவாறு வைது கேவலமாக நடத்துகிருள்கள். இது அவர்களிடஞ் சகஜமாய்க் காணப் படுகிறது. அவர்கள் நம்மினத்தை சேர்ந்த பெண்களைப் படுத்துங் கொடுமை சொல்லுந் தரத்ததன்று.

இக்நாஸியஸ் ராஜம்மாள்:-அதுமட்டுமா! அவ்வாட வர்கள் நம்மினத்தவராகிய பெண்களைத் தங்களுக்கு அடி மைகளென்றன்ருே நினைத்து அடக்கி யாளுகிருர்கள்?

- நல்லமுத்து:-அதுவாயினும் ஒருவாறு பொறுக்கக்

கூடியதாயிருக்கிறது. இக்கொடிய ஆடவர் சேர்க்கையால் நம் மகளிர் வயிற்றில் மூட்டையன்ருே கட்டிக்கொள்ளு. கிருர்கள்? (ஒரே சிரிப்பு) அம்மம்மா ஒரு நாளா ஒரு மாதமாl இரண்டு மாதமா! பத்து மாதங்கள்வரையல்லவோ அப்பளுவைத் தாங்கித் தொலைக்கவேண்டியிருக்கிறது. இப் பிள்ளைப்பேற்றைவிட கஷ்டமான காரியம் வேருென்று இருக்க முடியாது என்றே துணிந்து சொல்வேன். இவ். வொரு காரணத்தைக்கொண்டே ஆடவர் கூட்டுறவை நாம் அறவே யொழிக்க வேண்டுமென்பது புலப்படுகிற தல்லவா! w

- இந்திராணி-மீசைமுளைத்த இவ்வாடவர்களை விரும்பி விவாகத்தால் ஒன்று படாதிருந்தால் நாம் எப்போதும் பூவோடும் மஞ்சளோடும் சர்வாலங்கார பூவிதைகளாப் வாழ்நாள் முழுதும் இருந்து இன்பமாய்ச் சுயேச்சை' யாகக் காலங் கழிக்கலாம்.