பக்கம்:இவ்வுலகைத் திரும்பிப்பாரேன்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்

பார்ப்போமே என்று பலவாறு எண்ணி என் கருத்தை அவனுக்குத் தெரிவிக்க வாயெடுத்தேன். என்ன சிரிக்கிறீர் தோழரே! என் அறியாமையைக் கண்டு உமக்கு கைப் புண்ட்ாகிறது போலும் புரொபஸர் சம்பத்தின் நேர்க்கக் தைத் தெரிந்துகொள்ள அப்போது எனக்கு உண்மையி லேயே அறிவாற்றலில்லை. எனக்குப் பதினெட்டு வய துக்கு மேலாகியும் உலகானுபவம் சற்றும் ஏற்படாமலே இருந்தது. என் பெற்றேர்கள் என்னே உலகம் இன்ன தென்று அறிந்துகொள்ள முடியாதவாறு அவ்வளவு அரு மையாக வளர்த்தார்கள்.-இதற்குள் அம் மூர்க்கன் என் இனப் பற்றிவிட்டான். எனினும், அப்பிடிப்பு மிகவும் தளர்ந் திருந்தது. என்னைப் பிடித்த கைகள் நடுங்கிக் கொண் டிருகதன. -

அத்தடியன் கைகள் என்மீது பட்டதோ இல்லையோ எனக்கு எங்கிருந்தோ ஒருவித ஆவேச உணர்ச்சி ஏற். பட்டுவிட்டது. இதனிடையே என்னேப் பிடித்திருந்த அச் சம் இருந்த இடம் தெரியாமல் ஒடியொளிந்தது. உடனே ஒரே மூர்த்தன்யமாய் என்னைப்பற்றிய க்ைகளை உதறித் தள்ளிவிட்டு அவனப் பிடித்து ஒரு உந்து உந்தித் தள்ளி னேன். தசைப்பொதி தாங்கிய அத்தடியன் அப்படியே ஹார்ன் இடித்துக்கொண்டு அம் மூலையில் விழுந்தான். நீரின் ஒரு கணமும் தாம்தியாது அக்காரின் கதவைத் திறந்துகொண்டு கீழே இறங்கி ஒட்டமெடுத்தேன். -

சிறிது தொலைவுதான் ஒடியிருப்பேன். பின்னல் தட தடவென்று யாரோ ஓடிவரும் சப்தங்கேட்டது. திகிலோடு திரும்பிப் பார்த்தேன். வெறிபிடித்த அம்மடையனே என் இனப் பிடிக்கப் பின்தொடர்ந்து ஓடி வந்துகொண்டிருந் தான். எனக்கு என்ன செய்வதென்று தோன்றவில்லை.