பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100


சுருங்கக் கூறின் இஸ்லாத்தின் உயிர் மூச்சான சகிப்புத் தன்மையின் அடிப்படையில், பிற சமயக் கண்ணோட்டத்தோடு மதீனா நகர்ச் சட்டம் பெருமானாரால் வடிவமைக்கப் பட்டது. இதனால் சமயக் கண்ணோட்டமும் சமுதாய வாழ்வியல் சிந்தனையும் புறத்தோற்றம் பெற்றன என்றே கூற வேண்டும்.

இச்சட்டத்தின்படியே அன்றையச் செயற்பாடுகள் அனைத்தும் அமைந்திருந்தன என்பதற்குப் பலப்பல எடுத்துக்காட்டுகள் வரலாறு நெடுகிலும் காணக் கிடக்கின்றன.

அவரவர் வேத நெறிப்படி தண்டனை

சர்வ சமயத்தவர்களும் ஏற்றுக் கொண்ட மதீனா நகர்ச் சட்டப்படியே நடப்பதுபோல பாவனை செய்து வந்த யூதர்களில் சிலர் முஸ்லிம்களுக்கும் அண்ணலாருக்கும் மாறுபாடாக நடந்து வந்தனர். அத்தகையவர்களுள் ஒருவர் கையும் களவுமாகப் பிடிபட்டார். இவர் மதீனா முஸ்லிம்களுக்கு எதிராக, மக்காக் குறைஷிகளுக்கு உளவு சொல்லி வந்தவர். இவரைப் பொது நியமப்படி நாயகத் திருமேனி அவர்கள் நாடு கடத்தினார்.

பின்னர், அகழிப் போரின்போது சுமார் 300 யூதர்கள் மதீன மக்களுக்கு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலில் வெளிப்படையாக ஈடுபட்டு வந்தனர்.

அகழிப் போர் இறுதியில் மாபெரும் வெற்றியாக முஸ்லிம்களுக்கு அமைந்தது. அப்போது ஊரையே காட்டிக் கொடுக்கும் சதிச் செயலில் ஈடுபட்ட யூதர்கள் ஒரு கோட்டையினுள் சிறிதுகாலம் ஒளிந்திருந்து இறுதியில் நாயகம் (சல்) அவர்களிடம் சரணடைந்தனர்.