பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12


காரணம், ஒருவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆக வேண்டுமெனில் அவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களோடு, அவர்கட்கு முன்னதாக மனித குலத்தை இறைவழியில் வழிநடத்த, வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) முதற்கொண்டு அனுப்பப்பட்ட மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களையும் அவர்கட்கு இறைவனால் அருளப்பட்ட அனைத்து வேதங்களையும் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர் முழுமையான முஸ்லிமாக ஆக முடியும் என்பதுதான் அண்ணலார் வாக்கும் இஸ்லாம் உணர்த்தும் கோட்பாடுமாகும்.”

இஸ்லாம் மார்க்கத்தில் கட்டாயத்திற்கு இடமே இல்லை என்பதை விளக்க பல நிகழ்ச்சிகளை நூலாசிரியர் சித்தரித்துக் காண்பித்துள்ளார். திருக்குர்ஆன் “உங்களுக்கு உங்கள் மார்க்கம்; அவர்களுக்கு அவர்கள் மதம்” எனக் கூறுகிறது. “இஸ்லாத்தில் நிர்ப்பந்தமே இல்லை” என்பது திருக்குர்ஆனில் கண்டுள்ள தத்துவம். “நபியே! நீர் கூறும் (முற்றிலும் உண்மையான இவ்வேதமானது உம் இறைவனால் அருளப் பெற்றது. விரும்பியவர் இதை விசுவாசிக்கலாம். விரும்பாதவர் இதை நிராகரித்து விடலாம்.” இதுவும் திருக்குர்ஆனில் கண்டுள்ளது என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. இஃது பல எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்கப்பட்டுள்ளது.

சுவாமி விவேகானந்த அடிகளாரும் இதே அடிப்படையில் இஸ்லாத்தை பற்றிய கருத்துகளை கூறியுள்ளார். இஸ்லாமும் இந்து மதமும் இணைந்து வாழ்வது அவசியம் என்பது விவேகானந்தரின் கருத்து.

சமய நல்லிணக்கம் இந்தியாவிற்கு மட்டுமல்ல பல உலக சமுதாயங்களுக்கும் மிகவும் தேவையானது. இக்