பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

கிணைந்து, ஒத்துவாழ எல்லாவகையிலும் முயல வேண்டும்.

‘ஒரு முஸ்லிமின் சமுதாய நல உணர்வு அவனது அண்டை வீட்டாரிடமிருந்து தொடங்கப்பட வேண்டும்’. என இஸ்லாம் விதிக்கிறது.

இதற்கு அடித்தளமான உணர்வையும் சிந்தனையையும் ஊட்டும் வகையில் திருமறை,

“பெற்றோருக்கு நன்றி செய்யுங்கள் (அவ்வாறே) உறவினருக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும், அண்டை வீட்டினரான அந்நியருக்கும் (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உங்கள் ஆதிக்கத்திலிருப்போருக்கும் (அன்புடன் நன்றி செய்யுங்கள்) எவன் கர்வங்கொண்டு, பெருமையாக நடக்கின்றானோ அவனை, நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.” (திருக்குர்ஆன் 4:36) என்பது திருமறை தரும் வாக்கமுதாகும்.

சமுதாயத்தின் உதவியையும் ஒத்துழைப்பையும் பெறத் தக்கவர்களில் அண்டை வீட்டாரே எல்லா வகையிலும் முன்னுரிமை பெறத்தக்கவர்களாக அமைகின்றனர். இதையே பெருமானார் (சல்) அவர்கள்,

“தனது அண்டை வீட்டாருக்கு நல்லவராயிருப்பவரே இறைவன் திருமுன் அனைவரினும் மேலானவராவார்” என்றும்,

“தன் அண்டை வீட்டாருக்கு நன்மை செய்பவர்தான் உண்மையான நம்பிக்கையாளராவார்” என்றும்,