பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

177


மதீனாவில் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வாழ்ந்து வந்தபோது அவரது அண்டை வீட்டுக்காரராக இருந்த மாற்றுச் சமயத்தவரான யூதர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பெருமானாரின் வீட்டில் ஏதாவது சிறப்புணவு தயாரிக்கப்பட்டால், அதன் ஒரு பகுதியை அவருக்கு அளிக்காமல் அண்ணலார் சாப்பிட்டது இல்லை என்ற தகவல் ஹதீஸில் காணப்படுகிறது.

“அண்டை வீட்டார் பசித்திருக்க ஒரு முஸ்லிம் வயிறாற உணவு உண்ணக் கூடாது. அவ்வாறு உண்பவன் உண்மை யான இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது” என்பது அண்ணலாரின் புகழ் பெற்ற பொன்மொழியாகும்.

அண்டை வீட்டார்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி அன்பளிப்புகள் வழங்கிக் கொள்ள வேண்டும். பரிமாறிக் கொள்ளும் அன்பளிப்புப் பொருட்கள் அற்பமானவையாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் அன்பைப் பெருக்கிக் கொள்ள, பாசத்தைப் பகிர்ந்து கொள்ள, அதன் மூலம் சாந்தியும் சமாதானமும் உருவாக வாய்ப்பாயமைகிறது. எனவேதான்,

“அண்டை வீட்டார் அளிக்கும் எப்பொருளையும் அற்பமாகக் கருதக் கூடாது”

என அறிவுரை கூறியுள்ளார் அண்ணலெம் பெருமானார் (சல்) அவர்கள்.

சாதாரணமாக அண்டை, அயலார்க்கு எதையேனும் அன்பளிப்பாகத் தர விரும்பினால், அப்பொருள் சிறந்ததாக இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு. அதிலும் இவ்வுணர்வு பெண்களுக்குச் சற்று அதிகமாகவே உண்டு என்பது உளவியல் தரும் உண்மை. எனவேதான் குறிப்பாகப் பெண்களை நோக்கி,

12