பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

190

அத்தாட்சியை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம்” (திருக்குர்ஆன் 26:4)

அவ்வாறு செய்யாததற்கு அடிப்படைக் காரணம் இறை நெறியாகிய இஸ்லாத்தை ஒவ்வொருவரும் அறிந்து உணர்ந்து, தெளிந்து அதன்பால் இணைய வேண்டும் என்பதேயாகும்.

முதன்முதல் இறைச் செய்தி பெற்ற பெருமானார், அச்செய்தியை வெளியிட்டபோது வெகுண்டெழுந்த குறைஷிகள் பெருமானாருக்கும் அவரைப் பின்பற்றிய நபித் தோழர்களுக்கும் சொல்லொணாத் துயரங்களைக் கொடுத்தனர். அவற்றையெல்லாம் பொறுமையாக ஏற்றுச் சகித்துக் கொண்ட அண்ணலார் குறைஷிகளை எதிர்த்து ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை. அவர்கள் விரும்பி யிருந்தால் எதிர்த் தாக்குதல் நடத்தி தங்கள் இஸ்லாமிய நெறியை வலுக்கட்டாயமாகத் திணிக்க முயன்றிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. தாயிப் நகரில் இஸ்லாத்தை எடுத்துச் சொன்னதற்காகக் கல்லடிபட்டுத் திரும்பிய பெருமானார் தற்காப்புக்காகக் கூட எதிரிகளோடு போராடவில்லை. ஏன்? இறை நெறியாகிய இஸ்லாத்தை மாற்றுச் சமய மக்களிடையே எடுத்துக்கூறி விளக்குவது மட்டுமே நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கு அல்லாஹ் விடுத்துள்ள கட்டளை. இதையே திருமறை,

“நபியே இவ்வளவு விவரித்துக் கூறிய பின்னரும் அவர்கள் (உம்மைப்) புறக்கணித்து விட்டால், (அதைப் பற்றி நீர் கவலைப்படாதீர். ஏனென்றால்) அவர்களைப் பாதுகாப்போராக நாம் உம்மை அனுப்பவில்லை. (அவர்களுக்கு நம்முடைய தூதை) எடுத்துரைப்பதைத் தவிர (வேறொன்றும்) உம்மீது கடமையல்ல.”

(திருக்குர்ஆன் 42:48)