பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40


மேற்கண்ட இரு இறைவசனங்களிலிருந்து உலகிலுள்ள மனித இனங்கள் அனைத்திலும் இறை நெறிபுகட்டி மக்களை நல்வழிப்படுத்தும் இறைதூதர்கள், தீர்க்கதரிசிகள் தோன்றியிருக்கிறார்கள் என்ற பேருண்மை இனிது புலப்படுகிறது. இவர்கள் வாயிலாக அவ்வக் காலப் போக்குக்கும் சூழலுக்கும் மக்களின் அறிவாற்றலுக்கும் புரிந்துணர்வுக்கும் ஏற்ற வகையில் இறை தூதர்களும் இறை வாக்குக்கு விளக்கம் தந்து போதித்திருக்கிறார்கள் என்பதை திருக்குர்ஆன் திருமறையும் பெருமானார் (சல்) அவர்களின் பேருரையும் தெளிவுபடுத்துகின்றன.

வளர்ச்சிக்கேற்ப வழிகாட்டு நெறி

பெருமானாருக்கு முன்னதாக இறைவன் அனுப்பிய இறை தூதர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் ஒரு குறிப்பிட்ட வகுப்பாருக்கு மட்டும் என அமைந்தார்கள். அவர்கட்கு இறைவன் அளித்த செய்திகள் அப்பகுதியின் சூழலுக்கும், அப்பகுதி மக்களின் தன்மைக்குமேற்ப அமைந்து அவர்களை வழிநடத்தின. அப்பகுதி மக்களின் தாய்மொழியில் அமைந்த அவ்விறைச் செய்தியும் ஒரு குறிப்பிட்ட கால வரைக்குட்பட்ட அளவிலேயே அமைந்தன

காலத்தின் போக்குக்கும் சூழலுக்கும் தேவைக்கு மேற்ப புதிய இறைச் செய்தியோடு முந்தைய நபியைவிடத் திறம்பட்டவராக மற்றொரு நபி அப்பகுதி மக்களிடையே தோற்றம் வழங்குவார். இதுவே நபிமார் தோற்றம் பெற்ற வரலாறு.

சொன்னதோடு வாழ்ந்து காட்டியவர்

அண்ணலாருக்கும் முன்னதாக, உலக மக்களுக்கு வழிகாட்ட வந்த இறை தூதர்கள் எல்லோருமே சொல்லள