பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200


இருக்கும் என்ற நினைவாலேயே இக் காரியங்களைச் செய்கிறார்கள். ஆனால், உண்மையிலே இவையெல்லாம் தக்க பாதுகாப்புத்தானா? இவைகளை நாம் பாதுகாக்கும் வரைதான், இவை நமக்குப் பயன்படும், பாதுகாப்பளிக்கும். இவை நமக்குப் பாதுகாப்புப் பொருள்கள்போல் தோற்றமளிப்பனவே தவிர நிரந்தரமான பாதுகாப்புக் கேடயங்கள் அல்ல. காலப் போக்கில் இவை கைமாறிக் கொண்டே இருக்கக் கூடியன வாகும்.

ஆனால், ஒரேயொரு பாதுகாப்பு மட்டும்தான் தேடிய காலத்திலிருந்து நாம் மண்ணறைக்குள் செல்லும்வரை அல்லும் பகலும் ஒரு விநாடியும் நம்மைவிட்டுப் பிரியாது, எலும்பும் சதையும்போல் நம்மோடு இரண்டறக் கலந்து இணைந்து நின்று பாதுகாப்பளிக்கும் ‘கல்வி’தான் அந்தப் பாதுகாப்பு.

அந்தக் கல்வியை முறையாகத் தேடிப் பெற்றவர்கள், கற்றுத் தேர்ந்தவர்கள் உயர் வருமானம் தரக் கூடிய பணிகளில் எளிதாக அமர்கிறார்கள். குளிர் பதன அறைகளில் அமர்ந்தவர்களாக பெரும் வருவாயை ஈட்டுகிறார்கள். சுகவாசிகளாக மாறுகிறார்கள். போதிய கல்வியைப் பெறாதவர்கள் பாலை வெயிலில் வெந்து நோகிறார்கள்.

நத்தை வேகம் புலிப் பாய்ச்சலாகும் விந்தை

உயர் கல்வி பெற பொருளாதார வசதியும் சூழலும் முக்கியம் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், இவையிரண்டும் சரிவர வாய்க்கப் பெறாதவர்களும் தங்கள் தன் முனைப்பால், இடையறா முயற்சியால், கடும் உழைப்பால் உயர் கல்வி பெற்று, சாதனை புரிகிறார்கள். இதன் மூலம் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த தங்கள் குடும்பப் பொருளாதார இடர்பாட்டை முற்றாகப் போக்கி, விரைந்து முன்னேற்றங்காண வழி வகுக்கிறார்கள். அத்தகையவர்