பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

205


மறுமைக்கும் தொடரும் கல்விப் பயன்

படிப்பின் பயன் எதுவரை ரொம்பப் பேர் நினைக்கிறார்கள், என்னதான் முயன்று படித்தாலும், அப்படிப்பு இந்த வாழ்வு முடியும் வரைதான். நம் வாழ்வு முடியும்போது நம் படிப்பும் முடிந்து விடுகிறது. எனவே, நாம் வாழும் காலத்தில் வளமோடு வாழ பொருள் தேடவும் புகழ் பெறவும் மட்டுமே இப்படிப்பு நமக்கு உதவுகிறது என எண்ணுகிறார்கள். இந்த எண்ணமே தவறானதாகும்.

அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் இந்த உலகக் கல்வியால் விளையும் பயன்களைப் பற்றி மிகத்தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த உலகில் நீங்கள் பெற்றுள்ள கல்வியை, நீங்கள் கூர்மைப்படுத்திக் கொண்ட நுண்ணறிவை உங்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பயன்படுத்தினால் அதன் பலன்களை இந்த உலக வாழ்வில் மட்டுமல்லாது அந்த உலகின் மறுமை வாழ்விலும் முழுமையாய் அனுபவிப்பீர்கள் என்பது நபிகள் நாயகத்தின் வாக்கமுதாகும். இதன் மூலம் போதிய கல்வியறிவு பெறும் இறைவனின் நல்லடியார் நன்மையின் உச்சத்திற்கே சென்று விடுகிறார் என்பதுதான் உண்மை.

நாம் பெறுகின்ற கல்வி, அதன் விளைவால் வளர்த்துக் கொள்ளும் அறிவு வெறும் பண்ம் சம்பாதிப்பதற்காக மட்டுமல்லாது, செல்வச் செழிப்பைப் பெருக்கிக் கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தாது, இறைக் கடமைகளையும் நாம் செவ்வனே நிறைவேற்றி மறுமைப் பேறுகளையும் இவ்வுலக வாழ்வின்போதே பெறுகின்ற முயற்சியிலேயும் முனைப்பாக ஈடுபட, அக் கல்வி பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும். அழுத்தமான இறை நம்பிக்கையும் அதை வலுப்படுத்தும் ஐவேளைத் தொழுகையும் நோன்பும் ஜகாத்தும், இறையில்லம் ஏகலும் மறுமைப் பெரு வாழ்வுக்கு நம்மை விரைந்து அழைத்துச் செல்லும் ராஜபாட்டைகளாகும். அப் பெருவழியில் நம்மை வெற்றி