பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206


நடைபோட வழிகாட்டும் ஒளி விளக்கே நாம் பெறுகின்ற கல்வி.

இவ்வுலக வாழ்வில் உண்மையான நிலையான சிறப்பையும் உயர்வையும் உருவாக்கித் தருவதே நாம் பெறுகின்ற கல்விதான். கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாம் சிறப்பு என்பது பழம்பெரும் பழமொழி.

குறுகி வரும் உலகு

உலகில் உருவாகி நிலை பெறும் மாற்றங்களுக்கு வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாயமைபவர்கள் படித்தவர்களே, அவர்தம் சிந்தனைத் திறமே என்பதை யாரும் மறுக்க முடியாது. மனித குல வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், எத்தனையெத்தனையோ மாற்றங்கள், மாற்றங்களின் தொடர் நிகழ்வால் ஏற்பட்ட வளர்ச்சி. இறைவன் தந்த அறிவை கல்வியை மனிதன் பெருக்கிக் கொண்டதன் விளைவால் புதியனவற்றை எளிதாக புனைய முடிந்தது. அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்க இயன்றது. புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உலகின் உருவையே தலைகீழ் மாற்றமடையச் செய்ததோடு, பரந்து பட்ட உலகை குறுக்கியும் விட்டது. போக்குவரத்துச் சாதனங்களின் துரித வளர்ச்சி உலகின் தூரத்தை மைல்களாக - கிலோ மீட்டராகக் கணக்கிட்ட நிலையிலிருந்து மாறி மணிக் கணக்கில் கணக்கிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இங்கிருந்து இந்தியாவை எத்தனை மணியில் அடைய முடியும். இங்கிலாந்து செல்ல எவ்வளவு நேரம், அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் செல்ல ஆகும் நேரம் எவ்வளவு என்று கணக்கிடும் நிலை உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் கம்யூட்டர் என்று சொல்லப்படும் கணினிக் கருவியும் அதனுள் செயற்படும் இன்டர்நெட் என்று அழைக்கப்படும் இணையமும் இன்று உலகையே உள்ளங்கையில் சுழலச் செய்யும் நிலை. விரல் நுனியில் சுழலச் செய்யும் வியக்கத்தக்க நிலை உருவாகியுள்ளது. பரந்து பட்ட உலகம்