பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208


ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். இன்றும் இந்தக் கசப்பான உண்மையை நம் சமுதாயம் முழுமையாக உணர்ந்து தெளியவில்லை. உணர்ந்தவர்கள் காரிலே சென்று, குளிப்பதன அறைகளிலே தம் வாழ்க்கையை நடத்துகிறார்கள். மற்றவர்கள், தகிக்கும் வெம்மையில் வெறும் உடல் உழைப்பை மட்டுமே நம்பி கைக்கும் வாய்க்கும் எட்டாதவர்களாக வாழ்கிறார்கள்.

ஐந்தாம் வகுப்பு முடிக்குமுன் அபுதாபி

எந்தக் கல்வி அவன் வளர்ச்சிக்கு வளமான வாழ்வுக்கு ஏணியாக அமைகிறதோ அந்த ஏணியில் ஒரிரு படிகள்கூட ஏற முற்படுவதில்லை. ஐந்தாம் வகுப்பைத் தாண்டாமலே அபுதாபிக்குப் பிழைப்புத் தேடி ஒட முற்பட்டு விடுகிறான். சிலர், பள்ளிக்கூடத்தின் படியைக்கூட மிதிக்க முற்படாமல் தன் உடல் வலுவை மட்டுமே நம்பி, துபாய்க்கும் அரபு நாடுகளுக்கும் பயணப்பட்டு விடுகிறார்கள். இங்கு கொளுத்தும் வெயிலிலும் தகிக்கும் தணலிலும் புழுவெனத் துடித்து பொருளிட்ட முற்படுகிறார்கள். அவன் மட்டுமல்ல, அக் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் படித்து மேல்நிலை பெற எண்ணுவதுமில்லை.

ஊரிலே முன்னூறு ரூபாய் வருமானம் பெற முடியாத நிலையில், துபாயில் முன்னூறு திர்ஹம் அதாவது மூவாயிரம் ரூபாய் கிடைக்கிறதே என்று மட்டுமே எண்ண முடிகிறதே தவிர, ....... கல்வியறிவு பெற்றிருந்தால் மாதம் மூவாயிரம் திர்ஹம் அதாவது முப்பதினாயிரம் ரூபாய் வருமானம் பெறக் கூடிய நிலை பெற்றிருக்கலாமே என்று எண்ணுவதே இல்லை.

ஆண் மக்களின் நிலையே இதுவென்றால் நம் பெண் மக்களின் நிலையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். கல்வி ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என இஸ்லாம் போதிக்கிறது. இன்னும் சொல்லப் போனால் கல்வியை இருவருக்கும் கட்டாயமாக்கியுள்ளது. நம்