பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

211


வணக்கம் செய்தவனாவான்” எனத் தெளிவுபடக் கூறியுள்ளார்.

இந்தப் பொன்மொழியைக் கூர்ந்து கவனித்தால் பல பேருண்மைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மாதா, பிதாவுக்கு அடுத்த சிறப்புமிகு இடத்தைக் குருவுக்கு - கல்வி கற்பிக்கும் ஆசானுக்கு அளிப்பது தமிழ் மரபு. ஏனெனில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் அத்தகு சிறப்புக்குரியவராக விளங்குகிறார். 'கல்வி கற்பிப்பவன் அறம் செய்தவனாவான்’ என்று கூறுவதன் மூலம் கல்வி கற்பிக்கும் ஆசான் அறிவு வழி ஒழுகுபவன்; உண்மையான அறத்தைச் செய்யும் அறிவாளி; கல்வி கற்பிக்கும் அறச் செயல் மூலம், கற்போரையெல்லம் மனிதப் புனிதர்களாக மாற்றும் தகைமையுடையவர்களாக அமைகிறார்கள் என்பது எண்ணி மகிழத் தக்கதாகும்.

தகுதிமிக்க மக்களிடையே கல்வியைப் பரவச் செய்தவன் இறை வணக்கம் செய்தவனாவான்’ எனும் கருத்தும் ஆழ்ந்து சிந்திக்கத் தக்கதாகும். உண்மையான இறைவணக்கம் என்றால், நீ பெற்ற அறிவை, பெற்ற அனுபவத்தை, பெற்றுள்ள திறமையை, வளர்த்துக் கொண்ட தகுதியை, சிந்தாமல் சிதறாமல் மற்றவர்கட்குக் கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். இல்லாதவர்கட்கு அவை கிடைக்குமாறு செய்ய வேண்டும். மற்றவர்கட்கு அவற்றை ஈவதன் மூலம் அவர்களும் வளர, வளமோடு வாழ வாய்ப்பேற்படுகிறது. இந்தச் செயலில் எவன் ஒருவன் முழு மனதோடு ஈடுபடுகிறானோ அவனே உண்மையான இறை வணக்கத்தில் ஈடுபட்டவனாவான் என்பது பெருமானாரின் உட்கிடக்கையாகும்.

இறைவனே குருவான விந்தை

நான் நினைந்து நினைந்து வியந்து போகிறேன்.பிறந்தது முதல் கல்வி கற்கும் வாய்ப்பே பெறாத ஒருவரால் இந்த அளவுக்குக் கல்வி கற்பிப்பதன் மேன்மையை