பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216


தாயைப் போல் பேணி வளர்க்கத் தந்தையால் இயலாது. அதிலும் படித்த பெண், தாயாக அமைந்து விட்டால், அக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகட்கு அத் தாயே முதல் ஆசிரியையாக அமைந்து விடுகிறாள். அவளது பிள்ளைகள் பள்ளியில் ஐம்பது விழுக்காடு கல்வியும், தாயிடம் ஐம்பது விழுக்காடு கல்வியும் பெறுவதன் மூலம் நூற்றுக்கு நூறு விழுக்காடு கல்வி பெற்ற, நல்ல ஒழுக்கங் கற்ற பிள்ளைகளாக நம் பிள்ளைகள் அமைய அருமையான வாய்ப்பு உருவாகிறது. ஆண் பிள்ளைகளைவிடப் பெண் பிள்ளைகட்குக் கவனச் சிதறல் குறைவாக இருப்பதால், பள்ளி, கல்லூரிப் பாடங்களில் முழுக் கவனம் செலுத்தி, கல்வி கற்க, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பேற் படுகின்றது. இதனால்தான் இன்றும்கூட ஆண்டு இறுதியில் வெளிவரும் படிப்பு முடிவுகளில் ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளே அதிக விழுக் காட்டினராக வெற்றி பெறுகிறார்கள். ஏனெனில், பெண்கள் எப்போதுமே பொறுப்புணர்வு மிக்கவர்கள்.

உண்மைச் சேமிப்பு

இஸ்லாம் பெண்களுக்குப் பெருமையளித்தும் கட்டயாக் கல்வியைக் கடமையாக்கியிருந்தாலும் இன்னும் நம் சமுதாயம் பெண் கல்வியில் அதிக நாட்டமில்லாதிருப்பது வேதனைக்குரியதாகும். ஆணின் கல்வியிலேகூட அதிக ஆர்வமில்லாத நிலைதான் எங்கும் நிலவுகிறது.

நம் சந்ததிகளுக்கு நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சேமிப்பே அவர்கட்கு நாம் அளிக்கும் மார்க்க கல்வியும், சமுதாயக் கல்வியும், ஒழுக்கவியல் அடிப்படையிலான உண்மையான செயல்பாடுகளும்தான் என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். தாய் படித்தவளாக அமைந்து விட்டால் அக் குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைகள் படிக்காமல் போக வாய்ப்பில்லை. கல்வியினால் வாழ்க்கைத் தரமும் வாழ்க்கைப் போக்குமே மாறி