பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

219


கூரும் இவ் விழாவிலே அதற்கான உறுதி மொழியை நீங்கள் எடுத்துக் கொண்டால், படித்த சந்ததிகள் உருவாக, எதிர் காலத்தில் வளமாக வாழ, வளர வாய்ப்பேற்படும்.

இங்கு வேலை தேடி வருபவர்கள் எல்லாம் எத்தனையோ இடர்ப்பாடுகளைத் தாண்டி வந்தவர்கள் என்பதை நான் அறிவேன். நிலபுலன்களை அடகு வைத்தும் கடன் வாங்கியும் இங்கு வந்துள்ளோம். அவற்றையெல்லாம் அடைத்தபின், நம் சம்பாத்தியத்தின் ஒவ்வொரு காசும் நம் குடும்பத்தின் உயர்வுக்கும், வளரும் சந்ததிகளின் உயர்வுக்கு உதவுவதாக அமைய வேண்டுமே தவிர அவை பெரும் விழலுக்கு இறைத்த நீராக, வீண் ஆடம்பர டாம்பீக வாழ்க்கைக்கு பயன்படுவதாக அமைந்து விடக் கூடாது. நாம் சம்பாதிப்பதில் எவ்வளவு நியாயம் தேடுகிறோமோ அதே நியாய உணர்வு அப் பணத்தைச் செலவு செய்வதிலும் காட்ட வேண்டும்.

மறுமைக்கு வழிகாட்டும் இம்மை எளிமை

எளிமையாக வாழ்ந்து வாழ்க்கையில் ஏற்றம் பெற வழிகாட்டியவர் ஏந்தல் நபி. வெளி நாட்டுக்குச் சென்றவரின் சம்பாத்தியம். நம் வீட்டிற்குள் நுழையும்போதே, ஆடம்பரத்தையும் டாம்பீகத்தையும் ஊதாரித்தனத்தையும் உடன் அழைத்துக் கொண்டு தான் உள்ளே நுழைகிறது. பிறர் மெச்ச பெருமையாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் படாடோபமாக வாழ முயல்கிறோம். இதனால் நியாயமான செலவுகள் ‘கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா’வாக ஆகிவிடுகின்றன. ஆனால், எவ்வளவு செல்வச் செழிப்பு ஏற்படினும், எளிமையாக எப்படி வாழ வேண்டும் என்பதற்கு அண்ணல் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் வாழ்க்கை ஒரு வழிகாட்டி நெறியாக நமக்கு இன்றும் திகழ்கிறது.

அரபகம் முழுமையும் அண்ணலாரின் ஆட்சியின் கீழ் வந்தபோதிலும் அண்ணலார் ஆடம்பரம் தலைகாட்ட