பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

220


வாழ்ந்தாரில்லை. அவரது தனி வாழ்வில் எளிமையே அரகோச்சியது. அண்டை நாட்டு மன்னர்களெல்லாம் அண்ணலாரைக் காணவும், உரையாடி நட்பை வளர்த்துக் கொள்ளவும் நாட்டங்கொண்டு பரிவாரங்களோடு வந்து தங்கள் தகைமையை அண்ணலார் முன் நிலைநாட்ட முனைந்தனர். வருகிற மன்னர்கள், மன்னர்களுக்கேயுரிய நடையுடை பாவனைகளோடு, பந்தாவாக வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், மாமன்னர் நிலையிலிருந்த பெருமானாரிடம் எந்த மாற்றமும் இல்லை. மதினாவில் முதன் முதல் எத்தகைய ஆடையணிகளுடன் நுழைந்தார்களோ அதே எளிய உடையைத்தான் மன்னர்களைச் சந்திக்கும்போதும் அணிவதை வழக்கமாகக் கொண்டார். எளிய உடையுடன் ஈச்சம்பாய் விரித்த கட்டிலில் அமர்ந்திருப்பதோடு வரும் மன்னர்களையும் அவ்வாறே அமரச்செய்வது வழக்கம். இக் காட்சி உமறு (ரலி) வுக்கு மனச் சங்கடத்தை உண்டாக்கும். உடையலங்காரத்துக்கும் பெருமானார் எளிய உடைகளுக்குமிடையே ஒரு மாபெரும் இடைவெளி - வித்தியாசம் இருப்பதைப் பலப்போதும் உமர் (ரலி) கண்டு, வேற்று நாட்டு மன்னர்களைச் சந்திக்கும்போதாவது பெருமானார் உயர்ந்த ஆடைகளை அணிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். சந்திக்க வரும் மன்னர் பிரதானிகளும் மகிழ்வார்களே என எண்ணிக்கொள்வார். இதைப் பற்றி நாயகத் திருமேனியுடன் பேச வேண்டுமென விழைந்தாலும் கேட்கத் துணிவில்லாமல் இருந்து விடுவார்.

ஒருநாள் அண்ணலாரோடு தனிமையில் உரையாடிக் கொண்டிருக்கும்போது, பேச்சு வாக்கில் இதைப் பற்றிப் பெருமானாரிடம் பேச விழைந்தார். 'பெருமானார் அவர்களே! மாமன்னர் நிலையிலிருக்கும் தாங்கள் ஆடம்பர ஆடையணிகளை அறவே விரும்புவதில்லை. ஒரு ஃபக்கீறைப்போல் ஆடையுடுத்தி, ஈச்சம்பாய் விரித்த கட்டிலில் அமர்ந்தபடி வெளிநாட்டு மன்னர்களைச் சந்தித்து