பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222


சிறப்பிடத்தைப் பெறுவது கல்விக்காகச் செய்யும் செலவாகும். நம் குடும்பத்தில், படிக்கக்கூடிய அனைவரையும் படிக்கச் செய்ய வேண்டும். அதற்காக நாம் எவ்வளவு முயற்சியை மேற்கொண்டாலும் - இன்னும் ஒரு படி மேலே போய் எந்தத் தியாகத்தைச் செய்தாலும் அஃது ஆயிரமாயிரம் மடங்கு பயனுள்ளதாகவே அமையும். அதுவே நம் புகழுக்கும் உண்மையான பெருமைக்கும் அடித்தளமாக அமையும் என்பதை மறக்க வேண்டாம்.

கல்லில் எழுத்தாகும் கல்விப் பணி

உலகிலேயே கல்விக்காகச் செலவு செய்தவர்களும் கற்றவர்களுக்காகச் செலவு செய்தவர்களும், கல்லில் எழுத்துப் போல நிலையான இடத்தைப் பெற்று விடுகிறார்கள் என்பதற்கு எத்தனையெத்தனையோ உதாரணங்கள் வாழ்விலும் வரலாற்றிலும் உண்டு.

அன்று கீழக்கரையில் வள்ளல் பெருந்தகை சீதக்காதி உமறுப் புலவருக்கு உதவி செய்தார். உமறுப் புலவர் அற்புதமான சீறாப்புராண பேரிலக்கியத்தை உருவாக்கினார். அதன் விளைவு? சீறாப் பாடல்களுக்கிடையே சீதக்காதியின் கொடைத் திறத்தைப் போற்றும் பாடல் வரிகள் இடம் பெற்றன. இதன் மூலம் தமிழ் இருக்கும்வரை - சீறா இருக்கும்வரை சீதக்காதியின் பெயரும் இருந்து கொண்டே யிருக்கும்.

அதைப் போல நீங்கள் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் கல்விக்காகச் செலவு செய்தால் உங்களுடைய பேரும் புகழும் அழியாச் சாசனமாக அக் குடும்பத்தில் அழுத்தமாக நிலைபெறும். என் தந்தை, என் அண்ணன், என் தம்பி அரபு நாடு சென்று அரும்பாடுபட்டு பணம் சம்பாதித்து என்னைப் படிக்க வைத்தார். நான் படித்து, ஒரு உத்தியோகத்திற்குச் சென்றபின்தான் எங்கள் குடும்ப தரித்திரம் விலகியது. வசதி பெருகிறது. மற்றவர்க்கு இணையாக, ஏன், ஒருபடி மேலாக வாழ