பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

223


முடிந்தது. எங்கள் கல்விக்கு மூலாதாரமான அவரே எங்கள் குடும்ப விளக்கு என்று உங்கள் உதவியால் படித்தவர்களெல்லாம் போற்றுவார்கள்; புகழ்வார்கள். இத்தகைய புகழுக்குரியவர்களாக ஒவ்வொருவரும் வாழ வேண்டும் என்பதுதான் இறை நியதி; பெருமானார் பெருவழி. அத்தகைய புகழ்மிகு பெரு வாழ்வை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு வாழ மனிதப் புனிதர் மாநபி பிறந்த நாள் விழாவிலே உறுதி கொண்டு இறை வழியில் உய்தி பெறுவோமெனக் கூறி என் உரையை முடித்துக் கொள்கிறேன்.

(16-7-98 அன்று அபுதாபி முஸப்பா பகுதியில் அமைந்திருக்கக்கூடிய ஈ.டி.ஏ. மெல்கோ கேம்ப் வளாகத்தில் நடைபெற்ற மீலாது விழாச் சொற்பொழிவுச் சுருக்கம்)