பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

230


‘மஸ்து’ தந்த மயக்கம்

‘மஸ்து’ பெயரால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் விபரீதத்தை உங்களிடம் கூறலாம் என எண்ணுகிறேன்.

குணங்குடி மஸ்தானைப் போன்ற ஒரு மாபெரும் பாரசீகச் சூஃபிக் கவிஞர் உமர்கையாம். அவர் உருவாக்கிய ஞான இலக்கியம் ரூபய்யாத்’ பாரசீக மொழியின் மாபெரும் ஞானக் களஞ்சியமாகப் பாராட்டப்படும் படைப்பு. அதிலே ‘மஸ்து’ எனும் சொல்லைப் பல இடங்களில் உமர்கையாம் பயன்படுத்தியுள்ளார். இறைவனைப் பற்றி, இறையுணர்வைப் பற்றி பல அரிய கருத்துகளைத் திறம்படக் கூறியுள்ள அந்நூலை ஆங்கிலப் புலமைமிக்க, பாரசீக மொழியும் ஒரளவு அறிந்த ஃபிட்ஜெரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மொழி பெயர்ப்பின்போது மஸ்து என்பதற்கு இறை மயக்கம் என்று பொருள் கொள்வதற்கு மாறாக, வெறும் மயக்கம் எனப் பொருள் கொள்ளலானார். மஸ்து எனும் பெர்சியச் சொல்லுக்கு மரபு முறையிலான பொருள் விளங்காததால், வெறுமனே மயக்கம் எனப் பொருள் கொண்டதோடு, மயக்கம் ஒரு மனிதனுக்கு எதனால் வரும் என எண்ணிய மாத்திரத்தில் மதுவால், மங்கையால், கவிதையால் வரும் என அவரளவில் அனுமானித்தவராக மது, மாது, கவிதை என மொழி பெயர்த்து விட்டார். இம் மொழிபெயர்ப்பைப் படித்த தேசிய விநாயகம் பிள்ளை, கையிலே கம்பன் கவியுண்டு. மதுக் கலயமுண்டு. மங்கை மடியுண்டு என்று கருத்துப்பட பாடலானார். அதைப் படித்த கண்ணதாசன் கோப்பையிலே அவன் குடியிருப்பு என உமர்கையாமை மதுக் கோப்பைக்குள் தூக்கிப் போட்டுப் பாடினார். மொழி பெயர்ப்பில் எங்கோ ஏற்பட்ட ஒரு சிறு தவறு தொடர்ந்து பெருக்கமடைந்து நேர் மாறான போக்கையே உருவாக்கி விட்டது. மதுவைத் தொட்டறியாத, அன்னிய மங்கையரை ஏறெடுத்தும் பாராத, ஒரு மாபெரும் சூஃபிக் கவிஞரை,