பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

233


அப்பா போன்ற ஞான மேதைகளுமே இஸ்லாத்தை மக்களிடையே பரப்பிய மாபெரும் பணியை ஆற்றியவர்கள்.

இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் அனைவரும் வெளிநாட்டவரோ அல்லது வெளி நாடுகளிலிருந்து ஆட்சி செய்தவர்களோ இல்லை. பாபர் போன்றவர்கள் வெளி நாட்டிலிருந்து வந்திருக்கலாம். ஆனால் அவர்தம் சந்ததியினர் அனைவரும் இங்கேயே பிறந்து, வாழ்ந்து மடிந்தவர்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. 600 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் இந்தியர்களாகவே வாழ்ந்து மறைந்தவர்கள். இஸ்லாமிய மார்க்க நெறிகளைப் பின்பற்றி வாழ்ந்த போதிலும் இந்த மண்ணுக்கே சொந்த மான கலை, பண்பாடுகளைப் பேணியவர்கள்; போற்றி வளர்த்தவர்கள்; வளப்படுத்தியவர்கள்.

‘யார்?’ என்பதல்ல; ‘என்ன?’ என்பதே

இந்தியாவின் தனித்துவம் என்ன தெரியுமா? ‘யார்’ என்று பார்ப்பதில்லை. ‘என்ன’ என்பதில் கருத்தூன்றுவதே அத் தனிப்பெரும் பண்பாடு. வெளியிலிருந்து யார் வந்தாலும் அல்லது எந்தச் சமயம் வந்தாலும் அதிலுள்ள நல்லனவற்றையெல்லாம் ஏற்று தனதாக்கிக் கொள்வதே அத் தனித்துவம். ஜைன சமயமாகிய சமண சமயம் இந்து மதத்தை எதிர்த்து எழுந்த இந்தியச் சமயமாகும். காலப் போக்கில் சமண சமயத்தில் இந்துமதக் கருத்துகளை கொஞ்சங் கொஞ்சமாகப் புகுத்தி, சமண சமயத்தையே இந்து சமயத்தின் ஒரு கிளைச் சமயம் போல் ஆக்கி விட்டது. இந்து சமயத்தை எதிர்த்து கெளதம புத்தரால் உருவாக்கப்பட்ட சமயம் புத்த சமயமாகும். அதிலும் இந்து மதக் கருத்துகளைத் திறமையாகப் புகுத்தி புத்த சமயத்தினரின் தனித்துவமே குலைக்கப்பட்டது. சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுந்த புத்த சமயத்தில் இந்து சமயச் சடங்குகளையெல்லாம் புகுத்தி ஹீனயானம்,