பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234


மகாயானம் என்ற இரு பெரும் பிரிவுகளை ஏற்படுத்தி, பலவீனப்படுத்தி இந்து சமயச் சாயலோடு இயங்கச் செய்து சீர் குலைக்கப்பட்டது. இப்படி இந்தியாவில் உருவாக்கப்பட்ட அனைத்துச் சமயங்களிலும் இந்து சமயம் தன் கைவரிசையைக் காட்டிய போதிலும் இஸ்லாம் மார்க்கத்தை அதனால் நெருங்கவே முடியவில்லை. அதன் தனித்துவத்தில் எந்தச் சீர் குலைவையும் ஏற்படுத்த இயலவில்லை. காரணம், இஸ்லாத்தின் அடிப்படை அத்தகு வலிமை வாய்ந்ததாக அமைந்துள்ளது. இஸ்லாத்தில் கூறப்படும் இறைக் கொள்கை இறைவன் ஒருவனே; உருவமற்றவன்; ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அலியுமில்லை. அவன் யாரையும் பெறவுமில்லை. அவன் யாராலும் பெற்றெடுக்கப்படவுமில்லை. எடுத்து இணைப்பதென்றால் இதைத்தான் எடுத்து இந்து மதத்தில் சேர்க்க வேண்டும். அவ்வாறு இவ்விறைக் கொள்கையை எடுத்து இணைத்தால் அங்கே இருக்கும் இறை பற்றிய மற்ற இந்து மதக் கொள்கைகளெல்லாம் தகர்ந்து போகும்.

ஆனால், சீக்கிய மதத்தை உருவாக்க நினைத்தவர்கள் இந்து மதத்தின் சிறந்த கொள்கைகளில் சிலவற்றையும் இஸ்லாமியக் கொள்கைகளில் சிலவற்றையும் இணைத்து ஒரு புதுவகைச் சமயத்தை குருநானக் போன்றவர்கள் உருவாக்கலானார்கள். ஆனால், அதையும் இந்து மதவாதிகள் விட்டு வைக்கவில்லை. நாளடைவில் இந்து மதக் கருத்துகளையெல்லாம் அதோடு இணையச் செய்து, அதனையும் இந்து மதப் பிரிவாகவே ஆக்கிவிட்டார்கள். அதை எதிர்த்து இன்று பல சீக்கியர்கள் மூல வடிவில் சீக்கிய சமயத்தை மீண்டும் உருவாக்கிப் பின்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஆனால், இந்து சமயத்தைப் பொறுத்தவரை வேறொரு காரியத்தைத் திறம்படச் செய்து வருகிறார்கள். இஸ்லாத்தில் இந்து மதக் கருத்துகளைப் புகுத்த அறவே இயலாததால், இஸ்லாமியக் கருத்துகளில் பலவற்றைத்