பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

238


தென்னகத்தில், குறிப்பாக கர்நாடகப் பகுதியில் மிக வலுவாக ஒரு கால கட்டத்தில் திகழ்ந்தது. அச்சமயத்தின் ஆச்சாரியராக பஸவேஸ்வரர் என்பவர் திகழ்ந்தார்.

அக் கால கட்டத்தில் இஸ்லாமிய சூஃபியாக்களில் பலர் கர்நாடகத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் இஸ்லாமியப் பிரச்சாரத்தை மக்கள் உள்ளம் ஏற்கும் வகையில் வலுவாக ஆற்றி வந்தார்கள். மக்கள் மத்தியில் இஸ்லாம் மிகுந்த செல்வாக்குப் பெறத் தொடங்கியது. ஆங்காங்கு வாழ்ந்த மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தின்பால், தங்களை இணைத்துக் கொள்ள முனைந்தார்கள்.

இச் செய்தி சைவ சமய ஆச்சாரியரான பஸ்வேஸ்வரரை எட்டியபோது ஒரு புறம் ஆச்சரியத்தையும் மறுபுறம் மனக்கிலேசத்தையும் அவருக்கு ஏற்படுத்தியது. இஸ்லாமியப் பிரச்சாரத்தின் சாரத்தை நேரடியாகவே அறிய விரும்பி, இஸ்லாமியச் சூஃபிமார்களை அணுகி அவர்களோடு விவாதிக்கத் தொடங்கினார். அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடுகளை எடுத்து விளக்கியபோது, இஸ்லாமியக் கொள்கைகள் அனைத்தும் மனித குலம் ஏற்றிப்போற்றத் தக்கவைகளாக இருக்கின்றனவே எனக் கருதினார். இறை வணக்கச் சடங்கேதும் இல்லாததும் இஸ்லாம் தந்துள்ள பெண்ணுரிமையும் குறிப்பாக விதவைகளுக்குத் தரப்பட்டுள்ள மறுமண உரிமையும் சமுதாய மதிப்பும் அவருக்குப் புதுமையாகப் பட்டது. மொத்தத்தில் மனிதனை இறைவன் படைத்தது வாழ்வாங்கு வாழ்வதற்கேயன்றி வருந்திச் சாவதற்கு அல்ல என்ற கோட்பாடு அவருக்கு உவகையளித்தது. ஜகாத் போன்ற பொருளாதாரக் கொள்கைகளும் அவரை வெகுவாக ஈர்த்தன. உன்னதக் கொள்கைகளின் உறைவிடமாக இருக்கக்கூடிய இஸ்லாமிய நெறியில் தன்னை இணைத்துக் கொள்வதை விட தன்னைப் பின்பற்றும் பல்லாயிரம் மக்கள் இக் கொள்கை வழி வாழ, அதுவும் அவர்கள் காலங்காலமாய் பின்பற்றும் சைவ சமய வழியிலேயே வாழ