பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

239


வைக்க வேண்டும் என எண்ணினார். இவ்வெண்ணத்தை ஈடேற்றும் வகையில் சைவ சமயத்தில் பல்வேறு மாற்ற திருத்தங்களைச் செய்தார். இறைவனுக்கு அல்லாஹ் என்பதன் சாயலில் அல்லமா பிரபு என ஆக்கினார். இறைவனைப் பல்வேறு வடிவில் வணங்காது ‘லிங்க வடிவில்’ வணங்கப் பணித்தார். இவ்வழிபாட்டில் ஈடுபடுவோர் ‘லிங்காயத்துகள்’ என அழைக்கப் படலாயினர்.

பெண்களின் சம்மதத்தோடு திருமணம் நடக்கச் செய்தார். மண விலக்கு உரிமையளித்தார். மணப் பெண்ணுக்குத் தாலி எடுத்துக் கொடுக்குமளவுக்கு விதவைகளுக்கு மரியாதை ஏற்படுத்தினார். விதவை விவாகம் ஏற்புடையதாக்கினார். இறந்தோரை எரிப்பதற்கு மாறாகப் புதைக்கச் செய்தார். இவ்வாறு இஸ்லாத்தின் உயரிய கோட்பாடுகளில் பலவற்றை தான் பின்பற்றி வந்த சைவ சமயத்தில் இணைத்து, மக்களையும், அவற்றைப் பின்பற்றச் செய்தார். இக்கொள்கை வழி வாழ்வோர் “வீர சைவர்” களாவர் என அறிவித்தார். இவ்வாறு சைவ சமய சீர்திருத்தத்துக்கு இஸ்லாம் ஒரு பெரும் காரணமாய் அமைந்ததை இன்றும் காண முடிகிறது.

இவ்வாறு இந்தியாவின் மிகப் பெரிய சமயங்களெல்லாம் இயன்றவரை இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை தங்கள் தங்கள் சமயத்தினுள் ஈர்த்துக்கொள்ளத் தவறவில்லை. இதைப்பற்றி புகழ்பெற்ற சமூகவியல் ஆய்வறிஞர் டாக்டர் தாரா சந்த் அவர்கள் தமது புகழ் பெற்ற ஆராய்ச்சி நூலான "தி இஸ்லாமிக் இன்ஃபுளுயன்ஸ் இன் இண்டியன் கல்ச்சர்' எனும் ஆய்வுப் படைப்பில் வரலாற்றுப் பூர்வமாக பல உண்மைகளைத் திறம்பட தொகுத்துரைத்துள்ளார்.

தவிர்க்கவியலா நிலை

ஒரு கால கட்டத்தில் இஸ்லாம் எடுத்தியம்பும் வாழ்க்கை