பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242


சித்தர்களும் சூஃபிகளும்

சூஃபிகள் எனப்படும் மெய்ஞ்ஞானியர்களைச் சித்தர்கள் என அழைப்பது வழக்கம். இவர்களில் பதினெட்டுப் பேர்களைச் சிறப்பாக பதினெண் தமிழ்ச் சித்தர்கள் என அழைப்பர். இப்பதினெட்டுச் சித்தர்களுள் மூவர் முஸ்லிம்கள். மச்சரேகைச் சித்தர் எனும் ஐதுரூஸ், குணங்குடி மஸ்தான் எனும் சுல்தான் அப்துல் காதர், தக்கலை பீர் முஹம்மது அப்பா ஆகியோர் ஆவர். இவர்கள் மற்ற சித்தர்களைப் போன்று இறைநெறியை, அதை அறிந்துணர்வதற்கான மெய்ஞ்ஞான உணர்வை மனித குலம் ஒன்று என்ற நோக்கில் வழங்கிய சிறப்புக் கருதி, இவர்கள் மத பேதம் ஏதுமின்றி பதினெண் சித்தர் பட்டியலில் இணைத்து அழைக்கப்படலாயினர்.

தென்னகத்தில் சித்தர்களும் சூஃபிகளும் மெய்ஞ் ஞானத்தைப் பரப்ப விழைந்தது போன்றே வட நாட்டில் மனிதகுல வாழ்வு மேன்மையுற, மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்வியல் அடிப்படை உண்மைகளை, இந்து சமயத்தின் சிறப்புச் சிந்தனைகளை, இஸ்லாத்தின் ஏற்புடைய உயர் கருத்துகளையும் தத்தம் மொழிகளில் குழைத்து தந்து மக்களை நல்வழிப் படுத்த முயன்றனர். யார் என்பதைவிட என்ன என்பதில் மட்டுமே கருத்தைச் செலுத்தத் தூண்டும் இப் பெரியார்களின் முயற்சியே 'பக்தி இயக்க’மாக வட நாட்டில் நடைபெறலாயிற்று. இவ்வியக்கத்தை ஆற்றலுடன் நடத்திய பெருமை ராமானந்தர், கபீர்தாஸ், சாது தயாள், ராம தேவர், லால் தாஸ், பாபாலால் பிரான்தாஸ், ராம்சரண், ஜகஜீவன் தாஸ், புல்லா சாஹிப், சந்திர தாஸ், கேசவ தாஸ், கரீம் தாஸ் போன்றோர்களையே சாரும். இவர்கள் ஏற்புடையதெனக் கருதிய இந்து சமயச் சிந்தனைகளையும் இஸ்லாமியக் கருத்துகளையும் தங்கள் மொழிகளில் குழைத்துக் கொடுத்து, மக்களிடையே சமய சமரச உணர்வு மேலோங்க உழைத்தவர்கள். இவர்கள் தங்கள் பெயர்களிலேயே இரு சமயச் சாயலையும்