பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

285


வசூலிக்கப்படும் ஜிஸ்யா வரியும் எக்காரணம் கொண்டும் அரசு நிர்வாகச் செலவுகட்குப் பயன்படுத்தப்பட மாட்டாது.இஸ்லாமிய மார்க்கப் பயன்பாட்டுக் காரியங்களுக்கு இத் தொகை அறவே பயன்படுத்தக் கூடாது; தொடவே கூடாது.

பின் இத் தொகை எதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது?

முஸ்லிம் அல்லாதவர்களுடைய கோயில்கள், வழிபாட்டிடங்கள், சமயத் தொடர்பான விடுதிகள், மடங்கள் இவற்றின் சீரமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும். அங்கே இருக்கக் கூடிய ஏழை எளியோர்க்கு, முதியோர், நோயாளிகட்கு இத்தொகை செலவிடப்படும். இத்தொகைக்கு நிகராக அரசும் தொகை வழங்கும். இவ்விரு தொகைகளும் ஒன்றிணைக்கப்பட்டு மேற்கூறிய காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் என்பதுதான் உண்மை நிலை. அந்த உண்மையை அறிந்துணராதவர்கள், அறிந்தும் முஸ்லிம்கள் மீது மத வாதத்தை ஏற்படுத்த முனைபவர்கள் ஜிஸ்யா வரி குறித்த தவறான தகவல்களைத் தந்து வந்தார்கள்; தற்போதும் தந்து வருகிறார்கள். இப்பழிகள் இப்போது துடைக்கப்பட்டு வருகிறது

புரட்சிகரப் பொருளாதாரத் திட்டம்

இஸ்லாமிய சமூக, பொருளாதாரக் கொள்கைகள் இன்றைய உலகை விழிப்படையச் செய்து கொண்டுள்ளன. அந்த அளவுக்குப் புரட்சிகரமான பொருளாதாரக் கொள்கைகளைத் தன்னுள் கொண்டதாக இஸ்லாம் விளங்குகிறது.

நிலச் சீர்திருத்தம் இன்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது. 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்பது இன்று எங்கும் கேட்கும் புரட்சிகரமுழக்கமாகும். இந்த முழக்கத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முன்பு உலகுக்கு வழங்கியவர் உமர் (ரலி) என்றால் எல்லோருக்கும் வியப்பாக இருக்கும்.