பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

படையில் நூற்றுக்கணக்கான இலக்கியங்களை உருவாக்கினார்கள் முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்.

புதுப்புது இலக்கிய வடிவங்கள்

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் வழிவழியாகத் தமிழில் என்னென்ன இலக்கிய வடிவங்கள் உண்டோ அத்தனை வடிவங்களிலும் காப்பியம் தொடங்கி பள்ளு இலக்கியம் வரை இலக்கிய வகைகளை உருவாக்கினார்கள். அதோடு நிற்காது பாரசீக, அரேபிய நாடுகளில் புகழ் பெற்றுத் திகழ்ந்த இலக்கிய வடிவங்கள் பலவற்றைத் தமிழ் இலக்கண, இலக்கியத் தன்மைகளுக்கேற்ப மாற்றம் செய்து, தமிழ் இலக்கிய வடிவங்களாக அறிமுகப்படுத்திய பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களையே சாரும். அவ்வாறு கொண்டு வந்து சேர்க்கப்பட்ட இலக்கிய வடிவங்களே கிஸ்ஸா, மஸ்அலா, முனாஜாத்து ஆகிய அரபி மொழி வடிவங்களும், 'நாமா' எனும் பர்சிய மொழி வடிவமுமாகும். அதோடு, தமிழுக்கென்றே சில இலக்கிய வடிவங்களை உருவாக்கினார்கள். சமுதாயத் தவறுகளைச் சுட்டிக்காட்டும் 'நொண்டி நாடகம்', படையையும் போரையும் விவரிக்கும் படைப்போர் இலக்கியங்களையும், 'திருமண வாழ்த்து' என்ற புதுவகை மங்கல வாழ்த்துக் கதை இலக்கியத்தையும் படைத்தளித்தார்கள். தமிழையே அரபி வரி வடிவில் எழுதும் 'அரபுத் தமிழ்’ எனும் புது வகை மொழியமைப்பையும் உருவாக்கி வளர்த்த பெருமை இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கட்குண்டு. தமிழில் சங்க காலந்தொட்டு ஐம்பெரும் காப்பியங்களே உண்டு. ஆனால், இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்கள் இருபத்தியெட்டு காப்பியங்களை இருநூறு ஆண்டுகளில் படைத்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஒரு புலவன் ஒரு காப்பியம் என்ற அளவில் பாடியிருக்க; 'புலவர் நாயகம்’ என்றழைக்கப்பட்ட சேகனாப் புலவர் நான்கு காப்பியங்களை உருவாக்கிப் புது வரலாறு படைத்துள்ளார்.