பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருகில் வேடன் வருவதை அறிந்து பன்றி, காதினே உருவிக் கொண்டு வேகமாய் ஒடி மறைய லானது. வேடன் இதனைக் கண்டனன் ; மிகவும் கோபம் கொண்டனன் : ஓடி வந்து நாயிடம் உள்ளம் வெம்பி உரைத்தனன் 'காடு முழுதும் சுற்றியே கண்டோம் இந்தப் பன்றியை. கேடு கெட்ட மிருகமே, கிடைத்த பொருளை விட்டனே.” இந்த வார்த்தை தன்னையே இடித்து வேடன் கூறவே, அந்த நாயும் சோகமாய் அவனைப் பார்த்தே உரைத்தது என்னைச் சிறிய வயதிலே இருந்து வளர்க்கும் ஐயனே, என்னை யாரும் இதுவர்ை ஏய்த்து ஒட முடிந்ததா ? 6 9