பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருகில் இருந்த குன்றிலே அமர்ந்தி ருந்த காகமும், பறந்து சென்ற கழுகினைப் பார்த்து கினைக்க லானது: கழுகு சிறிய ஆட்டினைக் கவர்ந்து செல்லு கின்றது. கொழுத்த பெரிய ஆட்டையே கொண்டு நானும் செல்லுவேன்.' என்றே எண்ணிக் காகமும் எழுந்து பறந்து சென்றது. கன்கு கொழுத்த ஆட்டினை காடி முதுகில் அமர்ந்தது. முறுக்கி முறுக்கிக் கால்களால் முதுகி லுள்ள மயிர்களை இறுக்கிப் பிடித்துத் துக்கவே எத்த னங்கள் செய்தது. கனம் மிகுந்த ஆட்டினைக் காகம் தூக்க முடியுமோ ? மனத்தி லிருந்த ஆசையும் மாய்ங்து மறைய லானது. 102