பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசை மறைந்த தாயினும் ஐயோ, கால்கள் சிக்கின : வீசிச் சிறகை அடித்தது. வீண்தான். தப்ப முடியுமோ ? மாட்டிக் கொண்டு தவித்திடும் மடமை மிக்க காக்கையை ஆட்டுக் காரன் பார்த்தனன்; ஆவ லோடு நெருங்கினன். பறக்க வழியும் இன்றியே பரித விக்கும் காக்கையை, இறக்கை தன்னை வெட்டியே எடுத்து வீடு சென்றனன். அப்பா, இதுபோல் பறவையை அடியேன் பார்த்த தில்லையே எப்போ தப்பா பிடித்தனை ? என்ன பறவை சொல்லுவாய்' என்று கேட்ட மகனிடம் இடையன் கூற லாயினன்: "அன்பு மிக்க மைந்தனே, அதிசயம்போல் பார்ப்பதேன்? கொழுத்த ஆட்டைத் தூக்கியே கொண்டு செல்லும் ஆசையில் கழுகு என்று தன்னையே கருதிக் கெட்ட காக்கைதான்! 103